எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒரு சமயம் கலைவாணர் N.S.கிருஷ்ணன், எழுத்தாளர்கள் மாநாடு ஒன்றில் பேசினார்.
   
“தற்போதைய எழுத்தாளர்கள் பேனாவை எப்படிப்பட்ட
 *மையை*  
தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா?

 சிலர் 

*தற்பெரு“மை“*யில்

தொட்டு எழுதுகிறார்கள். 

சிலரோ 

*பொறா“மை“*யில் 

தொட்டு எழுதுகிறார்கள். 
வேறு சிலரோ 

*பழ“மை“*யில் 

தொட்டு எழுதுகிறார்கள். பரவாயில்லை.

 இவற்றையெல்லாம்

 *அரு“மை“*யான

 எழுத்துக்கள் என்று சொல்லாவிட்டாலும் ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம்.
 “ஆனால் எழுத்தாளர்கள் தொடவே கூடாத சில

*“மை“கள்* 
உள்ளன. 

இவை என்ன தெரியுமா? 
*கய“மை“*, 
*பொய்“மை“*, 
*மட“மை“*, 
*வேற்று“மை“* ஆகியவைதாம்.

 கூட்டத்தில் கைதட்டல் எழுந்தது.

“எழுத்தாளர்கள் தொட்டு எழுதவேண்டிய 

*“மைகள்“*
 என்னென்ன தெரியுமா?

*நன்“மை“* தரக்கூடிய 

*நேர்“மை“*, 
*புது“மை“*, 
*செம்“மை“*, 
*உண்“மை“*. 

இவற்றின் மூலம் இவர்கள்
நீக்க வேண்டியது 
எவைத் தெரியுமா? 
*வறு“மை“*, 
*ஏழ்“மை“*, 
*கல்லா“மை“*,
*அறியா“மை“*
ஆகியவையே. 
இந்த நோக்கத்தையே எழுத்தாளர்கள் தங்கள்

*கட“மை“* யாகவும், 

*உரி“மை“ யாகவும்*

கொண்டு சமூகத்திற்குப்

*பெரு“மை“* 

சேர்க்க வேண்டும்“ என்று பேசி முடித்தார். 

கூட்டத்தில் கைதட்டலும் உற்சாக ஒலியும் விண்ணைப் பிளந்தன.

படித்ததில்
பிடித்ததைப் பகிர்ந்தேன்.

மேலும்


மேலே