தமிழ் எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

*உவமைக் கவிதை*
சங்க இலக்கியத்தில் வரும் மரங்களை உவமைபடுத்தி எழுதிய காதல் கவிதை 

*தலைப்பு : வாகைசூட விடு*

நறுந்துணர் குழல் கோதி 
பெருங்கொன்றைப் பூச்சூடி
பெருந்துயர் தந்தாயே...

கல்லால நிழல் தாங்கி
சொல்லாழா மொழி நவிலும்
பொல்லாதச் சுடர்விழியே...

செல்லாத திசையெல்லாம் - தினம்
சொப்பனத்தில் வருகுதடி...

கொல்லாத களம் நோக்கி - மனம்
பல்லாக்கில் போகுதடி...

செங்கருங்கால் அடியார 
புல்லுருவி நிலம்போலே
செவ்விதழே என்நெஞ்சை 
செய்துவிட்டதேனோ...

புலராத வேளையிலும்
புல்நுனிப் பனிப்போலே
புடைநெஞ்சில் துயிலுரும்
பொன்னறும் பூமகளே...

புதுமேகம் வானில்
புலம் பெயருவது போலே...
புண்டரீகத் தீவே
உனை தினம் சுமப்பேனே...

ஆயிரங் காலூன்றி
ஆருமறியாது கனியுள்ளே பூ பூக்கும்
அகல்மரம் நானே - உன்னால்
அகர் போலேவானேன்...

அருந்தேனே நீயும்
அரிட்டமாய் கசந்தாலும்...
அரைமரமாகியே
அகம்பிணைப்பேனே...

கருவேல முட்கள்
நீ கொண்டபோதும்
களைப்பாற நானும்
தினம் வருவேனே...

கோடிப் பூ பூக்கும்
கொடிமுல்லைப் போலே
கூட்டின் உயிர்ச் சூழும்
கோதையானவளே...

கோணிச் சிணுங்கி எனை
கோட்டியாக்காது
கொட்டிச் சிரித்து உடன்
வாகைச் சூட விடு...

~*~

அருஞ்சொற்பொருள் அறிக:

நறுந்துணர் குழல் - (நறு)மணமுடைய (துணர்) கொத்தாக இருக்கும் (குழல்) கூந்தல்

செங்கருங்கால் அடியாரம் - அடி பெருத்த செம்மரம் (சந்தனமரம்)

புல்லுருவி - ஒட்டுண்ணி

புண்டரீகம் - வெண்தாமரை

அகல்மரம் - ஆலமரம்

அகர் - மணமுள்ள உயர் வகை மரம்

அரிட்டம் - வேம்பு

கோட்டி - பித்தன்

அரைமரம் - அரசமரம்

முத்தரசு மகாலிங்கம்

~*~

மேலும்

முத்தமிழ் சித்தரித்த உடையே...
முக்கனி தேன் சிந்தும் சிரிப்பே...
மூதுரை செப்பும் சிவந்த திருமேனியே...
முத்திரையில் முத்தமிடும் என் சித்திரமே...
கலையில் நீ அழகிய ஓவியமே...
விழியோரம் கவிபாடும் கலையெனும் சிலையே...
அன்பெனும் மொழியே...
இன்பத்தின் ஒளியே....
நீ அனைவருக்கும் இன்பத்தின் ஒளியே... (பல்லவி)

முத்தமிழ் பாடும் சிறு பாவை விழியோ
யாவரும் அறிந்த பாரதி கண்ட
யாவரும் அறிந்த பாரதி கண்ட
புதுமை முத்தமிழ் பாடும் சிறு பாவை விழியோ
இ சொற்றொடர் கொய்து
நாவினால் மொழிந்தால்
யாவரும் இ சொற்றொடர் கொய்து
நாவினால் மொழிந்தால் 
நல் உறவும் அறமும்
உள்ளத்தில் பெருகும்.
முத்தமிழ் பாடும் சிறு பாவை விழியோ...(அனுபல்லவி)

மேலும்

  தமிழுக்கு இனிமை என்றொரு பெயர் உண்டு. காரணம் ஏன் தெரியுமா?


*தேன்*கொண்டு வந்தவனை பார்த்து நேற்று ஏன் தேன் கொண்டு வரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். 
அதற்கு அவன் கூறிய இனிமை பொருந்திய பதில்..

ஐயா நீங்கள் கூறியதை நினைத் தேன் !
கொல்லிமலைக்கு நடந் தேன்!
பல இடங்களில் அலைந் தேன்! 
 ஓரிடத்தில் பார்த் தேன் !
உயரத்தில் பாறைத் தேன்!
எப்படி எடுப்பதென்று மலைத் தேன்!
கொம்பொன்று ஒடித் தேன்! 
ஒரு கொடியை பிடித் தேன் !
ஏறிச்சென்று கலைத் தேன்! 
 பாத்திரத்தில் பிழிந் தேன்!
வீட்டுக்கு வந் தேன்! 
கொண்டு வந்ததை வடித் தேன்!
கண்டு நான் மகிழ்ந் தேன்!
ஆசையால் சிறிது குடித் தேன் !
மீண்டும் சுவைத் தேன் !
உள்ளம் களித் தேன்! 
உடல் களைத் தேன் !
உடனே படுத் தேன்!
கண் அயர்ந் தேன்!
அதனால் மறந் தேன் !!

காலையில் கண்விழித் தேன்!
அப்படியே எழுந் தேன் !
உங்களை நினைத் தேன்! 
தேனை எடுத்தேன்!
அங்கிருந்து விரைந் தேன் !
வேகமாக நடந் தேன்! 
இவ்விடம் சேர்ந் தேன் ! 
தங்கள் வீட்டை அடைந் தேன் !
உங்களிடம் கொடுத் தேன் !
என் பணியை முடித் தேன்.!!
என்றார் அதற்கு தேன் பெற்றவர் 
தேனினும் இனிமையாக உள்ளது உமது பதில் 
இதனால் தான் நம் முன்னோர்கள் தமிழை
"" தமிழ்த்தேன் ""என்று உரைத்தனரோ 
என கூறி மகிழ்ந்தேன் என்றார்.*

படித்ததில் ரசித்தது...*

----------------------
தமிழ் மொழியை விட சிறந்த மொழி உலகில் வேறு ஏது ?ஆனால் சிலர் தொன்மை வாய்ந்த செம்மொழியாம் தமிழை புறக்கணிப்பதும் ,அழிக்க நினைப்பதும் மிகவும் கண்டிக்கத்தக்கது. 

தமிழர்கள் இதிலாவாது தாய்மொழி என்ற உணர்வோடு 
ஒன்றிணைந்து போராடினால் எந்தக் கொம்பனாலும், 
எந்த காலத்திலும் அழிக்க முடியாது. 


பழனி குமார்  

மேலும்

மிக்க மகிழ்ச்சி . தங்களின் தித்திக்கும் தேனினும் இனிய கருத்திற்கு நன்றி 25-Jul-2021 8:52 pm
பழனி குமார் அவர்களுக்கு வணக்கம் நானறிந்தது பொதுவான தேன், கொம்புத்தேன் , பாறைத்தேன் எனும் மலைத் தேன் புற்றுத்தேன் கொசுத்தேன் இவைதான். ஆனால் இன்றோ உங்கள் எண்ணத்தை தளத்தில் கவனித்தேன், அதைப் படித்தேன், கருத்தினை புரிந்தேன் ருசித்தேன் வியந்தேன் பிறகு சிந்தித்தேன் சிரித்தேன் நினைத்தேன் பதில் எழுதத் தீர்மானித்தேன் ,எழுதிமுடித்தேன், அதை அனுப்பியும் வைத்தேன் நல்லதோர் இலக்கிய முயற்சி பாராட்டுக்கள் 24-Jul-2021 10:29 pm

தமிழுக்கு என ஒரு stackexchange இணையத்தை தொடங்குமாறு stackexchange இணையத்திற்கு எடுத்துரைத்துள்ளேன். 50 பேர்களுக்கும் மேல் பின்தொடர்ந்தும், 40க்கும் மேற்பட்ட கேள்விக்கள் மற்றும் விவாதங்கள் நடைபெற்றால் மட்டுமே தமிழுக்கு என ஒரு stackexchange இணையத்தை தொடங்குவார்கள். இந்த இணையத்தின் மூலம், நாம் அணைத்து தமிழ் ஆர்வலர்களையும் ஒன்று திரட்ட முடியும். நாம், நமது நண்பர்கள் தமிழுக்காக செய்துவரும் அனைத்தையும் உலகின் பார்வைக்கு கொண்டுவரமுடியும். கீழ் உள்ள இணைப்பில் சென்று உங்களது ஆதரவை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


tamil.stackexchange.com

மேலும்

செய்வாய் இமை பதற பதற
இடை சிதற சிதற ஒரு யுத்தத்தை
தருவாய் உடை உதற உதற
பெண் அதிர அதிர ஒரு மோட்சத்தை
வேர்வையும் வேர்வையும் வழியுதே
எலும்புகள் உன்னை கண்டு புடைக்குதே
உடம்புக்கு ஏது வரைமுறை
வா செல்வோம் இறுதிவரை

மேலும்

தமிழன்னை

எங்கள் எண்ணமெல்லாம்

எங்கும்நிறைந்தவள்

பிறர் அழிக்க அழிக்க நினைத்த போதெல்லாம் ஆர்ப்பரித்து 

எழுந்துநிற்பவள்


பிறர்மொழி துணை 

இன்றி வாழ்பவள்

உலக மொழிகளுக்கு 

தாயானவள் எங்கள் தாய் 

பாதம் போற்றி!!!





மேலும்

மகள் வெண்பாவுக்கு!


தாய போல இருக்கணும் அன்பா நீ - தோள்
சாய கூட இருக்கணும் நண்பா நீ - என்
விடியலாய் விரிந்திடும் வெண்பனி -என்
துடிப்பிலும் துதித்திடும் வெண்பா நீ
- என் வெண்பா நீ💕
அப்பா

மேலும்

ஒப்பனை செய்யாமல் தேவதையின் முகம் பேருந்து நிலையத்தில்..............

பிச்சைபாத்திரத்துடன்,,,,,,.

மேலும்

பட்டம் பெற பட்டணம் வந்து,
பகுத்தறிவை இழந்தான்,
இலவச இணைப்பாக - தன்
பலத்தை மறந்தான்- விளைவாக
அடக்கி ஆள்ந்தவன்- இன்று      
அடங்கி வாழ்கின்றான்...
நித்திரைக்கு முத்திரையிடு,
விடியும் முன் செயல் படு;
விடியும் விடியல் சொல்லட்டும்,
தமிழன் ஆளப்பிறந்தவன் என்று ...
                                            இப்படிக்கு
                                  என்றும் தமிழன்,
                         முஹம்மது ரில்வான்..

மேலும்

சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம்:-தங்கள் பட்டம் பெற பட்டணம் வந்து,பகுத்தறிவை இழந்தான்,இலவச இணைப்பாக -... எண்ணம் தேர்வு பெற்றமைக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் 26-Jun-2018 7:15 pm

தமிழா தமிழை மறக்கலாமா

மறக்கலாமா நீ
 தமிழா
 உனக்கு இங்கிலீசு நன்றாகக்
கதைக்கத் தெரிந்து
விட்டால் நீ என்ன
வெள்ளைக் காரன் ஆகிவிட முடியுமா..???
அல்லது திராவிடர் தோற்றம் தான்
உன்னை விட்டுப் போய்விடுமா????
வெள்ளையர் கூட நம்மைக் கண்டு விட்டால்
தம் மொழியில் ஹாய் சொல்லி
சிரித்து விட்டு செல்கின்றனர்
உனக்கு என்ன செருக்கா...???
தமிழனைக் கண்டு விட்டால்
எதிரியைக் கண்டது போல்
முகத்தை திருப்பி வைத்துப் போகின்றாயே.....
தமிழனுடன் தமிழில் கதைக்க
உனக்கு என்ன கேவலமா..????
நன்றி கெட்டவர்களே
உமக்கு நம் மொழி இழக்காரமாகிவிட்டதா????
வெள்ளையரைத் தாண்டிச் செல்லும் போது
கதைக்காமல் போகின்றாய் நீயும்
தமிழரைத் தாண்டிச் செல்லும் போது
ஆங்கிலத்தில் கதைத்துக் கொண்டு
ஒரு வித இழு பட்ட நடையுடன் போகின்றாயே....
உனக்குத்தான் இங்கிலீசு தெரியும்
என்று பெருமை சேர்க்கின்றாயோ ..
உனக்கு நீயே தற்ப்புகழ் சேர்க்கின்றாயோ...
அட அறிவு கெட்டவர்களே
தற்புகழ் தேடுவது நற்ப்புகழ் அல்ல
என்று சொல்லக் கேட்டு நீயும் அறிந்ததுண்டா..???
இதற்கு விளக்கம் நீயும் தெரிந்து கொண்டதுண்டா...?????
இங்கு பிறந்த தமிழ்க் குழந்தைகள் கூட
இனிமையுடன் நம் மொழியைப் பேசும் போது
நீ இங்கு வந்த கொஞ்சக் காலத்திலே
தமிழ் கதைக்கத் தெரியாமல்
விழிக்கின்றாயே நீயும் செருக்குடன் திரிகின்றாயே...
உனத் தாங்கி வளர்த்துவிட்ட
உன் தாய் மொழியை நீதான் மறக்கலாமா..
அட நன்றி கெட்டு நீயும் உந்தன் நாட்டு
தாய்த் தமிழ் மொழியை மறக்கலாமா...????

மேலும்

மேலும்...

மேலே