kavithai எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எரிதழல் எடுத்துவா தோழி!!!--------------------------------------------
இறைவனே
பெண்களுக்கு ஏனிந்தப்பிறவி தந்தாய்?
இல்வாழ்க்கை ஆனாலும்
பொது வாழ்க்கை ஆனாலும்
அவர்களுக்கு
நல் வாழ்க்கையே  இல்லையே !!
நிலவரங்கள் மாறி
கலவரங்கள் ஆகும்போது
களப்பலி ஆவதெல்லாம்
பெண்கள்தானே !!
பெண்மையை ...
கோவில் கருவறைக்குள்
சக்தியாய்
பார்க்கும் உலகம்
மனிதக் கூட்டத்தில்
சகதியாய் பார்க்கிறதே !!
இனியொரு விதி செய்வோம்
இன்னொரு முறை
துகிலுரியப்படும்போது
கண்ணனுக்காகக்
காத்திருக்க வேண்டாம்
தீ மிதிக்கச் சொல்லும்
ராமன்களை
செவிமடுக்க வேண்டாம்

தமிழ் மகளாம்
கண்ணகியாய் மாறிடுவோம்
மதுரை எரிந்தது போல்
மனித மிருகங்கள்
எரிந்து அழியட்டும்.இனிமேலாவது
மாதரையும் மதிக்கின்ற
மானுடம் தழைக்கட்டும்.
மாமுகி .



மேலும்

செம்மொழியான தமிழ்மொழி
-----------------------------------------------
கல்லும் மண்ணும் தோன்றாத
காலத்தே தோன்றியது எங்கள் தமிழ்
சொல்லும் அணியும் குன்றாத
இலக்கணம் இயற்றியது எங்கள் தமிழ்
இயலிசை கூத்தாய் குறையாத
இனிமை படைத்தது எங்கள் தமிழ்
முதலிடை கடையாய் மங்காதசங்கம் அமைத்தது  எங்கள் தமிழ்
குறுசுவை குறளாய் அழியாத
வேதம் ஈன்றது எங்கள் தமிழ்
கரும்பினும் சுவையாய் உடையாத
சிலம்பு படைத்தது எங்கள் தமிழ்
பகைகெடு வீரமெனில் தளராத
வல்லினமாவது எங்கள் தமிழ்சுவைதரு காதலெனில் மலராக
மெல்லினமாவது எங்கள் தமிழ்
விதிசொலும் நீதியெனில் மாறாத
இடையினமாவது எங்கள் தமிழ்
களவையும் கற்பையும் அழியாத
காவியம் ஆக்கியது எங்கள் தமிழ்
உடலையும் உயிரையும் பிரியாத
உயிர்மெய் ஆக்கியது எங்கள் தமிழ்
வழிபடு இறைவனை அழைக்கத்திரு
வாசகம் தந்தது எங்கள் தமிழ்
எதிர்படு பகைவரை அழித்து பரணி
நாதம் முழங்கியது எங்கள் தமிழ்
அன்று தொல் காப்பியன் கண்டஇலக்கணப் பொன்மொழி எங்கள் தமிழ்
இன்று நல் தலைவர்கள் கண்டஇலக்கியச் செம்மொழி எங்கள் தமிழ்
காலம் வென்றெடுத்த அறவழி
சொன்ன மறைமொழி எங்கள் தமிழ்
ஞாலம் வென்றெடுக்கும் அறிவியல்
சொல்லும் புதுமொழி எங்கள் தமிழ்இல்லை என்பதை இல்லையாக்கும்
இனிய வாய்மொழி எங்கள் தமிழ்
உள்ள அன்பதை கொள்ளையாக்கும்
புதிய தாய்மொழி எங்கள் தமிழ்
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
பேச்சும் மூச்சும் எங்கள் தமிழே
ஊனும் தமிழ் ஊன்  உறைந்து  வாழ்
உயிரும் தமிழ் அது எங்கள் தமிழே
மாமுகி

மேலும்

யாப்பு மோனையும் இல்லாதது பாவினமோ

நேரிசை வெண்பா


அகத்தியன் செய்த அணிமோனை வேண்டாம்
பகரும் கவினின் பகரம் --- விகற்ப
மதையேற் றிடாநம் மனமும் கொதிக்க
பதைக்குதையோ பாவினமாம் பார்

பகரும். = சொல்லுதல்

பகரம். =. பதில்






தாங்கள் இந்த எழுத்துத் தளத்தில் பலவருடஙகளாகஎழுதி வருவது
பலரும் அறிந்தது. இந்தத் தளத்தில் அனேகரும் காதல்
பற்றியே உரைநடை பாடலையே ஏதோ யாப்பிலக்கணப் பாடலைப்
போன்று எழுதி வருவதும் அதை ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொள்வதும்
உமக்கும் பரிச்சயமே. நீங்களும் பலபல பாடல்களை வெண்பா என்றும்
கலிவிருத்தம் கலித்துறை என்றும் எழுதி அதை யாப்பார்வலர்கள்
கவனிக்கவும் என்றும் ஒராண்டாய் எழுதி வருகின்றீர்கள். அப்பாடல்களில்
பலத்திலும் கனிச்சீர்களும் பூச்சீர் நிழல் சீர்கள் வரை எழுதினீர்கள் .. நானும்
மற்றொருவர் பாவலர் பாமணி டாக்டர் அவர்களும் இதைச் சுட்டிக்காட்டி
பலமுறை அப்படி எழுதுவது தவறு என்று கூறியது எழுத்தில் இன்றும் கிடக்கிறது.
அதற்கு நீங்கள் யாப்புப் பாக்கள் வேறு நான் எழுதுவது பாவினம் என்றீர்கள்


பவினமென்று யாப்பிலக்கண நூலில் விதிகள் சொல்லவில்லை என்று நான் சொல்லி
வந்தேன். மேலும் பாவினத்து வெண்பா கலிவிருத்தம் கலித்துறை என்று எழுதாதீர்கள்.
அப்படி நீங்கள் எழுத மற்றவர்களும் அந்தப் பிழையை செய்வார்கள் என்றும் கேட்டுக்கொண்டேன்.
ஆனால் நீங்கள் தொடர்ந்து பிழையாக எழுதி அதற்கு கலித் துறை கலி விருத்தம் அறு சீர் விருத்தம்
என்றெல்லாம் இஷ்டம் போல எழுதி வந்தீர்கள். பலதடவை டாக்டர் திரு வ. கன்னியப்பன் அவர்கள்
உங்கள் பாட்டைத் திருத்தி சரியான எதுகை மோனை போட்டு எழுதிக் காட்டியும் நீங்கள்
உங்கள் பிழையை ஒத்துக்கொள்ளாமல் அது பாவினம் மோனை வேண்டாமென்றீர்... அப்படியாயின்
கலி விருத்தம் கலித்துறை என்றும் அறுசீர் விருத்தம் எண்டும் குறிக்காதீர் என்றும் சொன்னோம்.

நான் 20.10.22 இன்று

குதிரை சவாரியாக் கழுதை சவாரியா ?

என்ற நேரிசை வெண்பா எழுதினேன்

புணரக் கழுதை குதிரையை யீனா
உணர்ந்துநீ யாப்பில் புனைவாய் --- கணக்காய்
நுணுக்கங் களையும் புரிந்து ஒதுக்கு
பனுவலாகா பாவினம் பார்


முதல் வரியில். பு. கு மோனை

இரண்டில். உ. பு. மோனை

மூன்றில். நு. பு. மோனை

நான்கில். ப. பா மோனை



யாப்பிலக்கணம் குதிரை என்றால் மற்றவை கழுதை
பாவினத்தில் யெவரும் செய்யுள் இலக்கியம் படைக்கவில்லை
முதலையும் மூர்கனும் கொண்டது விடாரென யாப்பு எழுத முடியாது
இல்லாத பாவினதை உறுதி செய்யாதீர்

ணு. னு வர்க எதுகை. இரு விகற்ப நேரிசை வெண்பா

என்ற வெண்பாவில் மோனைகளின் அவிசியமும்
பாவினம் என்பதொன்று இல்லை என்று எழுதினேன்


அதற்கு நீங்கள் பதில் சொல்லும் விதத்தில் 20.10.22 பகல் 2.16 மணிக்கு
கீழ் கண்ட இன்னிசைக் சிந்தியல் வெண்பா எழுதி


பாவினம் எழுதி நாவினில் உலவச் செய்வோம்
யாப்பினை என்று எழுதி மழுப்பி இருந்தது.


உங்கள் பாடல் இதுதான்

பாவினத்தை பாவைநாம் யாப்பின்
அழகினில்

நாவில் உலவிடச் செய்திடுவோம்
பூவிழியே

பூவிதழே புன்னகைபோ தும்


அதற்கு நானும் ஒரு கருத்து அளித்தேன் அதுவும் கீழே உள்ளது

" தம்பி கவின் சாரலருக்கு வணக்கம்

பாடலின் இரண்டு மூன்று வரிகளில் மோனை யில்லை மற்றும் பாவினக் கருத்து பரப்பல் தவறு
இதைத்தான் துளி விஷம் என்பது .. எழுந்து நிற்க முடியாதவனுக்கு யாப்பு பாவினமும் இரண்டு பெண்டாட்டி எதற்கு !


"" யாப்பிலக்கணத்திற்கு எதிராக பாவினம் என்ற விஷத்தை பரப்பதீர்கள் "" என்று சொன்னேன்

அதற்கும் விடாமல் நீங்கள் தந்த பதில்


இலக்கண அணுகுமுறைகள்
வேறானது
தளை தட்டா
சீரமைப்புதான் வெண்பாவின்
அடிப்படை விதி
அண்மையில் யாப்பிலக்கணம்
தெரிந்து ஆர்வத்தில் எழுதுகிறீர்கள் நன்று
அதனாலே உங்கள் கருத்திற்கு
மரியாதை கொடுத்து எழுதுகிறேன்
தமிழ்க் கடவுள் முருகனுக்கு
இரண்டு மனைவியர்கள்
அதுபோல் தமிழ்க்கவிதைக்கு
இருவர்
ஒருத்தி யாப்பினள்
இன்னொருத்தி புதுக்கவிதையினள்



நான் உங்களைக் கேட்டது யாப்பு என்று பாவினத்தை புகுத்தவேண்டாமென்றேன் நீங்களோ பாவினம் விடுத்து
புதுக்கவிதை இன்னொரு மனைவி என்கின்றீர் இப்போது பாவினம் மாறி புதுக்கவிதையை
போட்டு எதற்கு திசை மாற்றுகிறீர்,குழப்புகின்றீர். பாவினம் என்ன ஆயிற்று.


மேலும் நானும் "". அண்மையில் யாப்பிலக்கணம் தெரிந்து ஆர்வத்தில் எழுதுகிறீர்கள் நன்று """
என்று ஏதோ நான் யாப்பு அறியாத அப்பாவி இன்றுதான் கற்றுக் கொண்டவனென சொல்லுகிறீர்கள்

நான் 40 வருடமாய் சித்தர்களின் வெண்பா களி விருத்தம் கலித்துறை கழிநெடிலடி விருத்தம் போன்ற யாப்புப் பாடல்களை படித்து வருகிறேன்.ஆனால் 5 வருடங்களாகத்தான் எழுத்தில் எழுதுகிறேன் அந்த
40 வருட படிப்பு அனுபவமில்லையா போதாதா. ?


வெண்பாவில் மோனை வேண்டும் என்று கேட்டால் உங்கள் பதில்


""" தளை தட்டா சீரமைப்புதான் வெண்பாவின் அடிப்படை விதி மோனை தேவையில்லை
அடிப்படை விதி யில்லை என்கிறீர்கள். எங்கிருக்கிறது வேண்டாமென்று சட்டம்


நான் காட்டுகிறேன் வேண்டுமென்ற சட்டம் இதுதான
எனது பதிலும் இதுதான்

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அகதியனும் வள்ளுவனும் வெண்பாவில் கலித்துறை
கலிவிருத்தத்தில் எதுகை மோனை வைத்து எழுத கவின் சாரலருக்கு அது தெரியவில்லையா
அல்லது எழுத வரவில்லையே என்பதை சொல்ஸ்ட்டும்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய சில பழைய கலித்துறையும் வெண்பாவும் தந்துள்ளேன்
பாருங்கள். அதில் யாரெல்லாம் வெண்பாவில் மோனையை எழுதி இருக்கிறார் பாருங்கள்


சுமார் 40 வருடங்களாக 28 சித்தர்களின் நூல்களை 50 க்கும்ர் மேற்ற்பட்ட நூல்களைப் பலமுறை
ஆழ்ந்து படித்திருக்கிறேன்

சித்தர்கள் அகத்தியர் கொங்கணர் சிவ வாக்கியர் கைலாய முநிகள் யாக்கோபு போகர்
கோரக்கர் மச்சர் தன்வந்திரி திருமூலர் மற்றுமுள்ளோர் அனைவரும் யாப்பின் இலக்கணத்தில்
விருத்தங்கள் வெண்பா கலித் துறை கலிவிருத்தம் பாடல்களிலே தக்க எதுகை மோனை யுடன்
பாடியுள்ளதை ஆயிரக்கணக்கில் பார்க்கலாம். கேட்டால் நானே காட்டுகிறேன் . எங் கிருந்து
வந்தது உங்கள் பாவினம் காட்டுங்கள்.

அகத்தியர் பரிபாஷைத்திரட்டு. 500

அகத்தியர். ( காய கற்ப ரகசியம் பற்றிய நூல் )


கலித்துறை

காபபு

பரமஞா னோதயத்துப் பரஞ்சுடர் உலகுக் கெல்லாம்
திரமதாய் உதித்தஞான திவாகரன் திருத்தாள் காப்பு
கரமாம் வகாரயோ கமறைப்பு நூற்பாடை யெல்லாம்
முருகவிழ் தமிழ்செய்ய முருகனைங் கரர்தாள் காப்பே

நான்கு வரிகளிலும் ஒன்று மூன்று சீர்களில் தவறாத மோனைகளைப் பாருங்கள்

ப, ப தி. தி. க. க. மு. மு


பாயிரம்


கலித்துறை

இந்தநூலைந் துகாண்டத் தியம்பிய கருவே தென்றா ல்
சந்தேகந் தீர்க்கவேண்டித் தமிழ்கவி யைநூற் றுக்குள்
மந்திரவா தயோக மணிபஞ் சீகரண மார்கம்
சிந்தைசெய்வ காரபாட்டை தீட்சையுஞ் செப்பு மாதே


இக்கலித்துறை யிலும் 1 மற்றும் 3 லும் மோனைகளை கவனியுங்கள்

1.இ. தி 2. ச. த. 3. மா. மா. 4. சி.... தீ


திருவள்ளுவர் எழுதிய காயகற்ப நூலில்.

பஞ்சரத்தினம் எனும் நூலில்


வெண்பா

தன்னை யறிந்தவற்குந் தானன்றோ வானத்தில்
அன்னையவள் வந்துமே ஆதரித்து --- முன்னை
பவமோட்டிப் பாலூட்டிப் பக்குவமேற் கூட்டிச்
சிவநிலையை சேர்ப்பாள் சிறந்து. (பாடல். 74)

வரி 1 இல். த ,. தா,,. 2 இல் அ. ஆ. 3 இல். ப. ,. ப 4 இல். சி. ,. சி

வெண்பா

பிண்டத்தின் மேற்குப் பிரிதிவி தான்கிழக்கு
அண்டத் தினடிமுடி யற்சிப்பார் -- விண்டுமுன்னே
காணாச் சுழிமுனையை கண்டார்க்கு பிண்டத்தில்
மாணா பலிக்கும் மருந்து. (75)

வரி
1. இல். பி. ,பி. 2 இல்ல அ. ,. ய(அ). 3 இல். கா,. க. 4 இல் மா,. மா

வெண்பா

அப்புவுடன் வன்னியும் ஆனதோர் தேயுவும்
இப்புவியி லேக மிருந்திட -- ஒப்பியதோர்
ஆதி வழலை ஆகுமே ஈதறியும்
சேதியின் நூலினால் செய். பாடல். (89)


வரி 1 இல் அ. ஆ. 2 இல் இ,. மி. 3. இல். ஆ. ,. ஆ. 4. இல் சே ,. செ



அகத்தியர் எழுதிய மதி வெண்பா. 100 என்ற நூலிலும் பாருங்கள்
தவறாத மோனையை அகத்தியர் கையாண்டது கண்ணால் பார்த்து நம்புங்கள்
மோனையை அகத்தியர் காலத்திலேயே கையாண்ட ஒன்று . மோனை
வே ண்டாமென்பது கையாலாகாத த் தனம். வேறில்லை என்பேன்

இதுவொரு கிடைத்தற்கரிய நூலாகும்


கடவுள் வாழ்த்தில் பாருங்கள்


வெண்பா

ஆதி சிவனுமையாட் கன்புடனே யன்றுறைத்த
சோதிமதி வெண்பாவைச் சொல்லுதற்கு. -- நீதியுள்ள
மாலைசிறு பெண்ணாம் மனோன்மணியி டம்வைத்த
காளையே றுஞ்சிவன்றாள். காப்பு


1 வது வரியில். ஏ. க. 2 வது சோ சொ. 3. வது மா,. ம. 4 வது. கா,. கா.

காப்பான ஐந்துகரன் கந்த முருகவேள்
வாய்ப்பா மலர்த்தான் மனதில்லை -- தேற்றித்
தவமுனி சித்தர்முதற் சாற்றிய நூலெல்லாம்
நவமணியா மிந்நூலை நத்து


1 வது வரையில். கா. க
2 வது வரியில். வ. ம
3 வது வரியில். த. ச
4 வது வரையில் ந. நா


பல ஆயிரம் வருடத்திற்கு முன்னமே தமிழ் படைத்த அகத்தியனும் பிறரு வந்தவர்களும்
எதுகை மோனைஉபயோகித்து எழுதிய ஆயிரக்கணக்கில் எழுதிய பல்வகைப் பாடலுண்டு.
வெண்பா கலிவிருத்தம் கலித்துறை வெண்பா கழி நெடிலடி விருத்தங்களை எங்குவேண்டுமாலும்
கொடுக்கிறேன்.. மோனை ஒன்றிரண்டு விடுபட்ட பாடல்களும் உண்டு .மோனை தேவையில்லை
என்று எங்கும் எவரும் சொன்னதில்லை . ஆனால் பாவினம் என்ற இல்லாத ஒன்றை சொல்லுவது
தவறு . அகத்தியனின் மோனைத் தவறா பாடலே சாட்சி


நன்றி

மேலும்

ஈற்றடியை இப்படியும் கொள்ளலாம்.. பதைக்கின்ற பாவினம் பார் பதைக்கவைக்கும் பாவினம் பார் 23-Oct-2022 5:15 pm
தொடருங்கள், நன்றே தொடருங்கள், அருமையாகச் சொன்னீர், நானும் புதுக்கவிதை எழுதுபவரைக் குறைசொல்லவில்லை, எழுத எழுத கவிதைகள் ஊறும், ஆனால், மரபு வகைக்கு எவ்விதத்திலும் பொருந்தாத ஒரு கவிதையின் கீழே பாவினத்தின் பெயரை ஒரு சிலர் குறிப்பிடுவது மிகவும் தவறு என்பதை நான் ஆமோதிக்கிறேன். அதேபோல, அடுக்குச் சொல்லை அடுக்கடுக்காக அடுக்கி, ஒரு வரிக்கும் இன்னோர் வரிக்கும் இடைவெளிவிட்டு, இரண்டாம் வரியின் ஈற்றுச் சொல்லுக்குபின் இடைக்கோடிட்டால், அது வெண்பா இலக்கணமாகி விடும் என்று சிலர் வெண்பாவைச் சிதைக்கின்றார், சொன்னால் சீறுகின்றார்..முறையாக இலக்கணம் பயிலாமல், வரிசையில் அடுக்கியதை விருத்தம், வெண்பா என்றெல்லாம் பதிவிடும்போது, அதையும் இலக்கணம் அறியாத சிலர் பாராட்டுகின்றார்.. என்ன சொல்வது, எப்படிப் புரிய வைப்பது. தொடருங்கள் உங்கள் முயற்சியை விடாதீர்... எதையும் சரியாக ஏற்றுக் கொளாமல் சிதைத்த தமிழின்நற் சீரைப் - புதைத்தார் வதைக்குமவர் பாக்கள் வனைந்த தெலாமும் பதைக்குதய்யா பாவினம் பார் நேரிசை வெண்பா பெருவை கி.பார்த்தசாரதி 23-Oct-2022 5:09 pm

மனிதம் - மதம்
ஓர் எழுத்து குறைபாட்டால் எத்தனை முரண்பாடுகள்

மனிதம் விதைக்கப்பட வேண்டிய மனங்களில்
மதம் அறையப்படுகிறது..

புத்தகம் எடுக்க வேண்டிய கைகள் காவித்துண்டுகள் ஏந்துகின்றன..

தேசியக் கொடி இருக்க வேண்டிய இடத்தில் காவிக்கொடி திணிக்கப்படுகிறது ...

இன்னும் போனால்
பாரத மாதாவும் காட்சி அளிப்பாள் காவி உடையில் கையில் கமண்டலத்துடன் ...


காலம் காலமாக எழாத கேள்விகள்
எங்கிருந்து தொடங்கி வைக்கப்பட்டது..

சிறுபான்மை என நினைத்து நசுக்க நினைப்பது எத்தனை அபத்தம்..
சிறு உளி பெரிய மலையையே பெயர்த்தெடுக்கும் என்பதை மறந்ததின் விளைவு

மாணவ சமுதாயத்தின் மீது 
மதநெருப்பினை உமிழ்ந்தது யார்?

மதம் மனிதனை தின்பது இன்னும் எத்தனை காலங்களுக்கு?
 
நாங்கள் மதங்களை கடந்தவர்கள் எங்களுக்கு ராமரும், நபிகளும் ஒன்று தான்

எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் இந்நாட்டுமன்னர் தான்

மனிதர்களை நேசிப்போம்
மனிதத்தை வளர்ப்போம்

            அன்புடன் ஆர்கே...

மேலும்

தூரம் 

நிலவைப் பிடிக்க முயன்றேன்
 எட்டவில்லை
என் நிலாவை பிடிக்க முயன்றேன் எட்டியது 
எப்படி? 
நான் பிடித்தது என்னவோ என் தோழி வெண்ணிலாவை அல்லவா? 
பெயர் என்னவோ ஒன்று தான் 
ஆனால் அதை பிடிக்கும்
 காலம் தான் தூரம் 
நிலவை பிடிக்க ராக்கெட்டில் போகனும் 
ஆனால் என் நிலாவை பிடிக்க 
மிதிவண்டி ஒன்று போதும் 
நிலாவை (சந்திரனை) பார்க்க 
அறிவியல் மாணவர்களும் விஞ்ஞானிகளும்
 தான் செல்ல முடியும் 
ஆனால் என் நிலாவை (வெண்ணிலாவை) பார்க்க, 
அன்போடு எவர் பார்க்க 
சென்றாலும் பார்க்க முடியும்
தூரம் அன்பிற்கு விதிவிலக்கு.

மேலும்

விண்

வானமே எல்லை
வானைப் பிடிக்க ஆளும் இல்லை
பட்டா போட பத்திரம் இல்லை
கிரயம் பண்ண புரோக்கரும் இல்லை
கிரஹப்பிரவேசம் செய்ய பத்திரிக்கை இல்லை
குடியிருக்க வீடும் இல்லை
மொத்தத்தில் வானமே 
சொர்க்கத்தின் சுதந்திர வில்லை .


மேலும்

புதன் அன்று பிறந்த
புத்தம் புது🌸🌸 பொக்கிஷமே! 🌸🌸
தைத்திங்கள் திருநாள் - எங்கள்
பொங்கல் திருநாள்!
💐நம் இல்லங்கள்💐
💐உள்ளங்கள் 💐
💐மகிழ்ச்சிகள்💐
💐நிறைந்திட💐
💐அன்பு உறவுகள்💐
💐இணைந்திட💐
💐புத்தம்புது பொலிவுடன் 💐
💐புத்தாடைகள்💐
💐ஜொலித்திட💐
💐பக்திபண்புடன்💐
💐பகலவனை வணங்கிட💐💐
💐வெண்ணிற பொங்கல் பொங்கிட!
💐பொங்கல் திருநாளை சிறப்பாக
கொண்டாடுவோம்!💐உழவர் மகிழ்நாளை💐
உன்னதமாய்
வரவேற்போம்💐
💐அனைவருக்கும்💐
🌸என் இனிய🌸
🌸பொங்கல் நல்🌸
🌸வாழ்த்துகள்🌸🌸
💐💐💐💐💐💐💐

மேலும்

  1.  

    புகழ் பெற்ற மருத்துவராம்
    பிதான் சந்திர ராய் நினைவுகளாம்
    மருத்துவர்கள் தினமாம்
    ஜூலை திங்கள் முதல் நாளாம்
    சமூகத்திற்கு சேவை
    தனிமனிதனுக்கும் தேவை
    ஒவ்வொருவரின் நலத்தை
    பாதுகாக்கும் வரத்தை
    பெற்றவர்கள் மருத்துவர்கள்
    போற்றுவோம் மக்கள்
    காக்கும் கடவுளாம்
    கண்ணெதிரே தெய்வமாம்
    சுத்தம் சோறு போடும்
    சுகாதாரம் நம்மை நாடும்
    உயிரைக் காக்கும் உத்தமராம்
    பாருலகம் போற்றும் பணியாளராம்
    நம்மைக் காத்து வீட்டையும்
    சொல்வதைக் கேட்டு நாட்டையும்
    போற்றி வணங்குவோம் மருத்துவரை
    சேவையை பெறுவோம் நல்வழியில்!
    0 

    கருத்துத் தெரிவி

  2.  

    காலத்தை மறந்தேன்
    நேரத்தை மறந்தேன்
    உறவை மறந்தேன்
    உற்றாரை மறந்தேன்
    பணியை மறந்தேன்
    பசியை மறந்தேன்
    இலக்கை மறந்தேன்
    வாழ்விலக்கணம் மறந்தேன்
    இனிமை மறந்தேன்
    இன்சுவையை மறந்தேன்
    நாளை மறந்தேன்
    நாலும் மறந்தேன்
    திசையை மறந்தேன்
    திரிவதை மறந்தேன்
    சேமிப்பை மறந்தேன்
    சேவிப்பதை மறந்தேன்
    நினைவுகளை மறந்தேன்
    நிஜங்களை மறந்தேன்
    தூக்கத்தை மறந்தேன்
    கனவை மறந்தேன்
    உன்னை மறந்தேன்
    ஊரை மறந்தேன்
    என்னை மறப்பதற்குள்
    மறைந்துவிடு வைரஸே!
    0 

    கருத்துத் தெரிவி

  3.  

    முகத்தின் திரை
    வைரஸின் விரோதி
    தொற்றின் குறைவு
    உயிரின் உடுப்பு
    மனிதனின் அடிப்படை
    வாழ்க்கையின் ஆதாரம்
    சமூகத்தின் நலம்
    உற்றாரின் உறவு
    கரோனாவின் கருவி
    பரவலின் தடுப்பு
    காலத்தின் கொடுமை
    கட்டாயத்தின் பயம்
    தும்மலின் வடிகட்டி
    இருமலின் அமைதி
    அழகின் அழகு
    விலையும் குறைவு
    அணிந்துவிடு உனக்கு
    அமைதியுறும் நமக்கு!
    0 

    கருத்துத் தெரிவி

  4.  

    யோகம் உண்டு உனக்கு
    யோகா செய்தால் இருக்கு
    மனதையும் உடலையும் இணைத்து
    ஆரோக்கியம் பெற அனைத்து
    இரத்த அழுத்தம் சீராகுமே
    மன அழுத்தம் குறைந்திடுமே
    கொழுப்புத் தன்மையை நீக்கிடுமே
    உடல் எடையை குறைத்திடுமே
    உடல் அமைப்பை அழகூட்டுமே
    மன அமைதியைத் தந்திடுமே
    மன அழுத்தத்தைக் குறைத்திடுமே
    மனதை மாண்புறச் செய்திடுமே
    சோர்வு, டென்ஷன் போக்கிடுமே
    திசுக்கள் தளர்வடையச் செய்திடுமே
    இரத்தம் பெருக்கி கூட்டிடுமே
    ஜீரணம் சீராக நடந்திடுமே
    நரம்பு மண்டலம் நல்லாகுமே
    இரத்த சோகையைக் குறைத்திடுமே
    முதுகு வலி, கால் வலி சரியாகுமே
    சுவாகக் கோளாறை சரிசெய்யுமே
    மூளை, உடல் பலப்படுத்துமே
    உடலுக்கு ஊக்கம் ஊட்டிடுமே
    தொப்பையற்ற வயிற்றைக் கொடுத்திடுமே
    இதய நோய்களைக் குணப்படுத்துமே
    விலையில்லா மருந்திருக்க
    மறந்து விட்டு இருக்கலாமா
    செய்திடுவோம் யோகாவை
    காத்திடுவோம் உடலை!
    0 

    கருத்துத் தெரிவி

  5.  

    மார்க்கோனியின் மகத்துவம்
    மக்களின் தனித்துவம்
    சிறார்களின் சிரிப்பொலி தாய்மார்களின் பாசம் சாமானியர்களின் தவப்பரிசு
    சாலையில் செல்லும்போது கூட
    நம் காதுகளுக்கு இனிமை தரும்
    எளிமையின் எடுத்துக்காட்டு
    மனதிற்கு நலம்
    மானிடர்களுக்கு செய்தி
    கடைக்கோடி மனிதனுக்கும்
    காசு இல்லாதவனுக்கும்
    கடவுள் கொடுத்த சொத்து
    விழிப்புணர்வின் விடிவெள்ளி
    கேட்டல் திறனை அதிகரிக்கும் கேடயம்
    நம்முடன் நடமாடும் நாடோடி
    பார்வையற்றவர்களின் உலகம்
    காற்றில் விசித்திரம்
    இதயத்தின் இதம்
    கதை சொல்லும்
    கதைசொல்லி
    குழந்தைகளின் குதூகலம்
    பாட்டிசைக்கும்
    பாசம் அளிக்கும்
    நலம் கொடுக்கும்
    நாலும் சொல்லும்
    அறிவுரை கூறும்
    ஆறுதல் அளிக்கும்
    மனநலம் காக்கும்
    ஆன்மீகத்திற்கு வழிகாட்டும்
    உழவு செய்யும்
    உழவனையும் தலைதூக்கும்
    மருந்து சொல்லும்
    மருத்துவரையும் பேசவைக்கும்
    கல்வி கொடுக்கும்
    நல்ல அறிவுரைகளையும் வழங்கும்
    எத்தனை மாற்றம் வந்தாலும்
    இதனை அடித்துக்கொள்வதற்கு ஆளில்லை.
    இதனை
    கேளுங்க கேளுங்க
    கேட்டுக்கிட்டே இருங்க!
    0 

    கருத்துத் தெரிவி

  6.  

    சோப்பு
    என்ற மூன்றெழுத்தும்
    மாஸ்க்
    என்ற மூன்றெழுத்தும்
    தொலைவு
    என்ற மூன்றெழுத்தும்
    பின்பற்றி
    கொரோனா
    என்ற மூன்றெழுத்தை
    முடிவு
    என்ற மூன்றெழுத்துக்கு
    கொண்டு வந்து
    வெற்றி
    என்ற மூன்றெழுத்தை
    அடைந்து
    நலம்
    என்ற மூன்றெழுத்தைக் காத்து
    கடமை
    என்ற மூன்றெழுத்துடன்
    பணியாற்றி
    பொருள்
    என்ற மூன்றெழுத்து
    ஆதாரத்தை அடைந்து
    வலிமை
    என்ற மூன்றெழுத்து
    கொண்ட
    அரசு
    என்ற மூன்றெழுத்தை
    உருவாக்கி
    கலாம்
    என்ற மூன்றெழுத்து
    கனவு
    என்ற மூன்றெழுத்தை
    உண்மை
    என்ற மூன்றெழுத்தாக
    அடைவோம்
    என்ற நம்பிக்கையில்
    காத்திருக்கும்
    இந்தியக் குடிமக்கள்.
    0 

    கருத்துத் தெரிவி

  7.  

    கஷ்டத்தை இஷ்டமாக்கப் பழகு
    துன்பத்தை இன்பமாக்கப் பழகு
    கடினத்தை எளிமையாக்கப் பழகு
    கை கழுவி சாப்பிடப் பழகு
    சமூக இடைவெளியோடு பழகு
    மாஸ்க் அணிந்து போகப் பழகு
    வைரஸோடு வாழப் பழகு
    இயற்கையோடு இணையப் பழகு
    கிருமியை எதிர்கொள்ளப் பழகு
    சத்துள்ள உணவை உண்ணப் பழகு
    வெண்ணீரை பருகப் பழகு
    தனிதிருக்கப் பழகு
    கணினியில் கற்கப் பழகு
    உடற்பயிற்சி செய்யப் பழகு
    ஊரிலேயே பிழைக்கப் பழகு
    உண்மையை பேசப் பழகு
    நேர்மையோடு இருக்கப் பழகு
    தர்மம் செய்யப் பழகு
    நீதியை நிலைநாட்டப் பழகு
    ஞாயத்தை ஞாலத்தில் பழகு
    திறமைக்கு வாய்ப்பளிக்கப் பழகு
    பதவியில் பணிவோடு பழகு
    அறிவை தேடிப் பழகு
    ஆராய்ந்து அறியப் பழகு
    அன்புடன் பேசப் பழகு
    தைரியம் பழகு
    பெரியோரை மதிக்கப் பழகு
    சான்றோராகப் பழகு
    சாதிக்கப் பழகு
    சமூக ஊடகங்களில் அளவோடு பழகு
    சாமானியராக இருக்கப் பழகு
    இருந்தும் இல்லாமல் இருக்கப் பழகு
    உண்டி கொடுத்து வாழப் பழகு
    எதிரியை நண்பனாக்கப் பழகு
    காற்றை தூய்மையாக்கப் பழகு
    மண்ணை மதிக்கப் பழகு
    நீரை காக்கப் பழகு
    வருங்காலத்திற்கு விட்டுச்செல்ல பழகு
    தூய்மையை காக்கப் பழகு
    சந்தர்ப்பம் உருவாக்கப் பழகு
    நிறை சொல்லப் பழகு
    முகத்தை பாராமல் உதவப் பழகு
    பெண்ணிடம் சகோதரனாகப் பழகு
    ஆணிடம் சகோதரியாகப் பழகு
    உபயம் பெறாமல் உய்யப் பழகு
    இதுதான் உன் வாழ்க்கைக்கு அழகு.
    0 

    கருத்துத் தெரிவி

  8.  

    அன்பை கற்றுக்கொடுத்தது
    அடக்கத்தைக் கற்றுக்கொடுத்தது
    ஆர்வத்தைக் கற்றுக்கொடுத்தது
    ஆக்கத்தைக் கற்றுக்கொடுத்தது
    இன்பத்தைக் கற்றுக்கொடுத்தது
    இன்னலைக் கற்றுக்கொடுத்தது
    ஈகையைக் கற்றுக்கொடுத்தது
    ஈரத்தைக் கற்றுக்கொடுத்தது
    உதவியைக் கற்றுக்கொடுத்தது
    உண்மையைக் கற்றுக்கொடுத்தது
    ஊக்கத்தைக் கற்றுக்கொடுத்தது
    ஊரைக் கற்றுக்கொடுத்தது
    எண்ணம் கற்றுக்கொடுத்தது
    எளிமையை கற்றுக்கொடுத்தது
    ஏழ்மையைக் கற்றுக்கொடுத்தது
    ஏக்கத்தைக் கற்றுக்கொடுத்தது
    ஐக்கியம் கற்றுக்கொடுத்தது
    ஐராவத பலத்தைக் கற்றுக்கொடுத்தது
    ஒற்றுமையைக் கற்றுக்கொடுத்தது
    ஒய்யாரத்தைக் கற்றுக்கொடுத்தது
    ஓய்வைக் கற்றுக்கொடுத்தது
    ஓலத்தைக் கற்றுக்கொடுத்தது
    ஔபரிதிகம் கற்றுக்கொடுத்தது
    ஔடதம் கற்றுக்கொடுத்தது
    குடும்பத்தைக் கற்றுக்கொடுத்தது
    குதூகலத்தைக் கற்றுக்கொடுத்தது
    சண்டையைக் கற்றுக்கொடுத்தது
    சாதிக்க கற்றுக்கொடுத்தது
    தண்டனையைக் கற்றுக்கொடுத்தது
    தனிமையைக் கற்றுக்கொடுத்தது
    நட்பைக் கற்றுக்கொடுத்தது
    நாட்டைக் கற்றுக்கொடுத்தது
    பண்பை கற்றுக்கொடுத்தது
    படிப்பினையைக் கற்றுக்கொடுத்தது
    மடமையைக் கற்றுக்கொடுத்தது
    மாற்றத்தைக் கற்றுக்கொடுத்தது
    இயற்கையைக் கற்றுக்கொடுத்தது
    செயற்கையைக் கற்றுக்கொடுத்தது
    பரபரப்பைக் கற்றுக்கொடுத்தது
    பண்பாட்டைக் கற்றுக்கொடுத்தது
    கொரோனா எனும் வைரஸ்
    கற்றதை கடைபிடிப்போம்!
    0 

    கருத்துத் தெரிவி

  9.  

    தனித்திரு
    விழித்திரு
    வீட்டிலிரு
    விலகியிரு
    ஊரடங்கியிரு
    எதிர்த்திரு
    தப்பித்திரு
    பசித்திரு
    தூய்மையாயிரு
    காத்திரு
    கடமையாயிரு
    கண்ணாயிரு
    ஆற்றலாயிரு
    கருத்தாயிரு
    அன்பாயிரு
    அடக்கமாயிரு
    கரம் கழுவியிரு
    அறமாயிரு
    ஊக்கமாயிரு
    இயல்பாயிரு
    சமத்தாயிரு
    சாந்தமாயிரு
    சாதித்திரு
    பணிந்திரு
    இசைந்திரு
    பிழைத்திரு
    உழைத்திரு
    உண்மையாயிரு
    ஊரிலிரு
    தவிர்த்திரு
    தாங்கியிரு
    லாவகமாயிரு
    வழக்கமாயிரு
    மகிழ்ந்திரு
    மாற்றமாயிரு
    ஏற்றமாயிரு
    எளிமையாயிரு
    படித்திரு
    பண்பாயிரு
    ஓய்ந்திரு
    ஒய்யாரமாயிரு
    இசைத்திரு
    நாட்டமாயிரு
    நம்பியிரு
    நாட்டிலிரு
    இரு இரு
    இவையனைத்தும்
    பெற்றிரு!
    0 

    கருத்துத் தெரிவி

  10.  

    பௌர்ணமி நிலவு
    அமாவாசை இருட்டு
    தேனின் சுவை
    மயிலின் தோகை
    காற்றின் இசை
    பறவையின் கூட்டம்
    எறும்பின் வரிசை
    பூக்களின் நறுமணம்
    வானில் நட்சத்திரங்கள்
    மழலையின் சிரிப்பு
    கண்ணத்தின் குழி
    அம்மாவின் அரவணைப்பு
    அப்பாவின் அறிவுரை
    ஆசிரியரின் வழிகாட்டுதல்
    ஆணின் வீரம்
    பெண்ணின் நாணம்
    இளைஞர்களின் துடிப்பு
    முதுமையின் பொறுமை
    கல்லூரியின் வாழ்க்கை
    உழைப்பின் வியர்வை
    சேமிப்பின் பயன்
    உண்மையின் மதிப்பு
    படிப்பின் உயர்வு
    மலையின் உச்சி
    கடலின் அலை
    சகோதரனின் பாசம்
    நண்பனின் நட்பு
    மாணவரின் நெருக்கம்
    வானவில்லின் வண்ணம்
    மழையின் துளி
    மண்ணின் வாசம்
    ஏழு சுரங்கள்
    பாடலின் உணர்வு
    ஏரிக்கரையின் காற்று
    ஆற்றின் சலசலப்பு
    மீனின் நீச்சல்
    கிளியின் பேச்சு
    பாம்பின் நளினம்
    யானையின் ஞாபகம்
    நாயின் நன்றி
    குதிரையின் வேகம்
    கண்ணின் மணி
    வனத்தின் மரங்கள்
    ஆமையின் பொறுமை
    தாங்கும் சொந்தம்
    தேனீயின் சுறுசுறுப்பு
    வைரத்தின் ஜொலிப்பு
    கண்ணாடியின் பிரதிபலிப்பு
    மூலிகையின் மகத்துவம்
    மார்கழியின் பனி
    மனிதனின் மதி
    அறிவியலின் வளர்ச்சி
    மனதின் மறதி
    இதயத்தின் ஓசை
    ஆண்டவனின் அருள்
    கானகத்தின் விலங்குகள்
    இவ்வளவும் அழகு
    அனுபவித்து வாழப் பழகு!

    0 

    கருத்துத் தெரிவி


மேலும்

தவறுகளில் அன்பு

துரோகம் தவறாக தெரியவில்லை 😤
உன்னை காதலிக்க பெற்றோர்களுக்கு துரோகம் செய்த போது 😑
சண்டை தவறாக தெரியவில்லை 👊🏻
உன்னிடம் காதல் சண்டையிட்டபோது 😆
கோபம் தவறாக தெரியவில்லை 😠
உன்னிடம் அன்பாக கோபித்துக் கொண்டபோது 😁
பொய்கள் தவறாக தெரியவில்லை 😉
உனக்கு ஆச்சர்யம் என்னும் அன்பு காட்ட நினைத்தபோது 😍

என்ன மாயமடி 😏 
கொலை கூட தவறாக தெரியவில்லை 😵
நீ கிடைக்காவிட்டால் என்னை நானே தற்கொலை செய்துகொள்வேன் என்று நினைத்தபோது...😪

...........................................................................💞M. PRAVEENBALI

மேலும்

அவள் கூந்தலின் பிம்பம்

மேகத்தின் கருமை.....
அவள் புன்னகையின் நிழல்
நிலவின் ஒளி....
அவள் கோபத்தின் பிரதிபலிப்பு
சூரியனின் கதிர்கள்......
அவள் சுவாசத்தின் மிச்சம்
காற்றின் பங்கு பூவியில்....
அவள் விரல் கிறுக்கல்களின் மீதி
விண்மீன் புள்ளிகள்.....
அவள் உச்சரிப்பின் மிச்சம்
உலக மொழிகள்....
யார் அவள்......??????  

மேலும்

மேலும்...

மேலே