எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நன்றி சொல்லுவோம் ---

  சர்பானுக்கு நன்றி சொல்வோம் 
நாளும் கருத்துரைத்து 
பல கவிஞர்களுக்கு ஆக்ஸிஜன் வழங்கும் 
கருத்து வள்ளலுக்கு நன்றி சொல்லுவோம் ! 
தேர்ந்த கருத்துக் கவிதைகளையும் 
வளமிக்க இலக்கிய மலர் மகரந்தங்களையும் 
தூவும் கவி மனதிற்கு நன்றி சொல்லுவோம் 
இவர் கருத்துரைக்கவில்லை என்றால் 
தானே எழுதி தானே படிக்கும் செல் ஃ பி கவிதைகளாக 
போயிருக்கும் எழுத்தில் பல கவிதைகள் ! 

குழுச் சேர்ந்து கும்மாளம் அடித்து கிரகாட்டம் ஆடி 
கோடைகாலத்து முகில் சிதறலின் தற்காலிக பொழிவுதான் 
என்றுணர்ந்து அஞ்ஞாத வாசம் போய்விட்டோரின் 
இலக்கியச் சோர்வையும் சடவையும் என் சொல்வது ? 
முகநூல் கூட்டத்துப் போலிப் பார்வையில் மனம் மகிழும் 
வெகுளிப் பிள்ளைகளின் கழிபேரிரக்க நிலையைத்தான் என் சொல்வது ? 
ஆதலினால் 
நண்பர்களே சிநேகிதர்களே தோழியரே 
அண்ணன் மார்களே தம்பி மார்களே 
அக்காமார்களே தங்கச்சிமார்களே 
தாய்மார்களே குழந்தைகளே 
பெரியோர்களே சிறியோர்களே 
தமிழ் சொர்கத்து சொந்தங்களே 
நற்கவி மனங்களுக்கு நன்றி சொல்லுவோம் 
----அன்புடன் , கவி + கருத்துப்பிரிய கவின் சாரலன்

மேலும்


மேலே