எண்ணம்
(Eluthu Ennam)
நன்றி சொல்லுவோம் ---
சர்பானுக்கு நன்றி சொல்வோம்
நாளும் கருத்துரைத்து
பல கவிஞர்களுக்கு ஆக்ஸிஜன் வழங்கும்
கருத்து வள்ளலுக்கு நன்றி சொல்லுவோம் !
தேர்ந்த கருத்துக் கவிதைகளையும்
வளமிக்க இலக்கிய மலர் மகரந்தங்களையும்
தூவும் கவி மனதிற்கு நன்றி சொல்லுவோம்
இவர் கருத்துரைக்கவில்லை என்றால்
தானே எழுதி தானே படிக்கும் செல் ஃ பி கவிதைகளாக
போயிருக்கும் எழுத்தில் பல கவிதைகள் !
குழுச் சேர்ந்து கும்மாளம் அடித்து கிரகாட்டம் ஆடி
கோடைகாலத்து முகில் சிதறலின் தற்காலிக பொழிவுதான்
என்றுணர்ந்து அஞ்ஞாத வாசம் போய்விட்டோரின்
இலக்கியச் சோர்வையும் சடவையும் என் சொல்வது ?
முகநூல் கூட்டத்துப் போலிப் பார்வையில் மனம் மகிழும்
வெகுளிப் பிள்ளைகளின் கழிபேரிரக்க நிலையைத்தான் என் சொல்வது ?
ஆதலினால்
நண்பர்களே சிநேகிதர்களே தோழியரே
அண்ணன் மார்களே தம்பி மார்களே
அக்காமார்களே தங்கச்சிமார்களே
தாய்மார்களே குழந்தைகளே
பெரியோர்களே சிறியோர்களே
தமிழ் சொர்கத்து சொந்தங்களே
நற்கவி மனங்களுக்கு நன்றி சொல்லுவோம்
----அன்புடன் , கவி + கருத்துப்பிரிய கவின் சாரலன்
நாளும் கருத்துரைத்து
பல கவிஞர்களுக்கு ஆக்ஸிஜன் வழங்கும்
கருத்து வள்ளலுக்கு நன்றி சொல்லுவோம் !
தேர்ந்த கருத்துக் கவிதைகளையும்
வளமிக்க இலக்கிய மலர் மகரந்தங்களையும்
தூவும் கவி மனதிற்கு நன்றி சொல்லுவோம்
இவர் கருத்துரைக்கவில்லை என்றால்
தானே எழுதி தானே படிக்கும் செல் ஃ பி கவிதைகளாக
போயிருக்கும் எழுத்தில் பல கவிதைகள் !
குழுச் சேர்ந்து கும்மாளம் அடித்து கிரகாட்டம் ஆடி
கோடைகாலத்து முகில் சிதறலின் தற்காலிக பொழிவுதான்
என்றுணர்ந்து அஞ்ஞாத வாசம் போய்விட்டோரின்
இலக்கியச் சோர்வையும் சடவையும் என் சொல்வது ?
முகநூல் கூட்டத்துப் போலிப் பார்வையில் மனம் மகிழும்
வெகுளிப் பிள்ளைகளின் கழிபேரிரக்க நிலையைத்தான் என் சொல்வது ?
ஆதலினால்
நண்பர்களே சிநேகிதர்களே தோழியரே
அண்ணன் மார்களே தம்பி மார்களே
அக்காமார்களே தங்கச்சிமார்களே
தாய்மார்களே குழந்தைகளே
பெரியோர்களே சிறியோர்களே
தமிழ் சொர்கத்து சொந்தங்களே
நற்கவி மனங்களுக்கு நன்றி சொல்லுவோம்
----அன்புடன் , கவி + கருத்துப்பிரிய கவின் சாரலன்