எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வேண்டும் !!! 


தீர தனிமையில் இருந்து மீட்டெடுக்க ஓர் குருட்டு காதலன்
சலிப்புகள் இன்றி சூறையாடும்
சலிக்காத காதல் 
என்றும் தீரா அட்சய பாத்திரமாய்
இடைவிடாத அன்பு
அழுதிடும் போது ஆறுதலாய் மங்காத அரவணைப்பு
ஊடல் இன்றி அடிமையென
பித்தாகும் பித்தன் 
மங்கிய விழிகளுக்குள் மரணம் தாண்டி கைதொடர நம்பிக்கை 
ஆர்பரித்து கொட்டும் மழைக்கு இதமாய் பருகும் தேநீர் போல உரையாடல்
மொத்தத்தில் - சல்லி சல்லியாய் நொறுங்கி போன மனதில் முழு பிரதிபலிப்பாய் என்னவன் எவனோ அவன் வேண்டும்.

 - கௌசல்யா சேகர்
     04-12-2023

மேலும்

உணர்வுகளைச் சிறப்பாக வெளியிட்டிருக்கிறீர்கள் 07-Dec-2023 4:58 pm
அருமை.... இப்படி எல்லாம் இப்போது யாரும் இல்லை 07-Dec-2023 4:23 am

சிதறல்கள்

சிதறல்கள்
சிதறிக்கிடக்கும் மழையின் சிறு துளிகள் தான் 
அழகிய வானவில்லை 🌈 தரும்..சிதறும் விதைகள் தான் அடர்ந்த காடுகளை தரும் சிதறி செல்லும் ஆறுகள் தான் பல குளம் ஒடைகளை தரும்
சிதறும் துகள்கள் தான் மின் விளக்கில் வெளிச்சம் தரும் சிதறல் யாவும் சிதைவதில்லை சரியாக சிதறும் பொழுதில்
நல் எண்ணங்களின் சிதறல்கள் நல் வினைகளை தருபவை...

மேலும்


வாழ்க்கை தேடல்

வானம் பொழியும் மழையும் நீலமில்லை
வானத்தின் பிம்பம் கடலின் நீரும் நீலமில்லை
தெரியுமாய் இருக்கும் பொருளில் தேடிப்பார்த்தால் தேடல் தவிர வேறில்லை வாழ்வில்...

மேலும்

❓ _என்ன__சொல்ல__போகிறாய்  ❓

 👫 என்னோட__பாசம்__உண்மை_என்று
நம்பிக்கைகளுடன்__என்னுடன்__கைகோர்த்து சொல்வாயா 👫

 🚶🏻 💔 என்னோட__பாசம்_வேஷம்__என்று நினைத்து__கைவிட்டு__செல்வாயா  💔🚶‍♀

 ❓ என்ன__சொல்லப்__போகிறாய் ...❓

மேலும்



ஊர்களும் பெயர்களும்
__________________________

சென்னை
(சென்னைக்கு அருகில் = காஞ்சிபுரம் & செங்கல்பட்டு மாவட்டங்கள்)

~~~~~~~~~~~~~~~~~~



தெய்வநாயகம் பேட்டை = தேனாம்பேட்டை

கோடகன்பாக்கம் =கோட்பாக் (கோடா பாக்)= கோடம்பாக்கம்

சையத்கான் பேட்டை =சையத் பேட்டை=சதயுபுரம்= =சைதாபேட்டை

சேற்றுப்பேடு= சேத்துப்பட்டு

சின்ன தறிப்பேட்டை=
சிந்தாதிரிப்பேட்டை

எழுமூர் =எழும்பூர் =எக்கிமோர் =எக்மோர்

அருகன்பாக்கம்=
அருகம்பாக்கம்

அயம்புரம்=அயன்புரம்=
அயனாபுரம்=
அயனாவரம்

அமைந்தகரை=
அம்ஞ்சிக்கரை

முகப்பு+ஏரி=முகப்பேரி=
முகப்பேர்

புரசைவாக்கம்
(புரசைப்பாக்கம்)= புரசவாக்கம்

ராயர்புரம்=ராயபுரம்

தொண்டையார்புரி=
தண்டையார் பேட்டை

செங்கழுநீர் பட்டு=
செங்கல்பட்டு

பெரிய குளத்தூர்=
பெருங்களத்தூர்

பல்லவபுரம்=
பல்லாவரம்

பூவிருந்தவல்லி=
பூந்தமல்லி

ஈர காடு தங்கல்= ஈக்காட்டுத்தாங்கல்

முகலிவாக்கம்=
மௌளிவாக்கம்

வள்ளி சேர் பாக்கம்= வளசரவாக்கம்

மா அம்பலம் (மாம்லான் ஆங்கிலேய கலெக்டர் தங்கியிருந்த இடம் என்றும் கூறப்படுகிறது)=
மாம்பலம்


கோயம்புத்தூர்
~~~~~~~~~~~~

கோவன் புத்தூர்(கோவன் என்ற பெயர் கொண்ட மக்கள்) = கோசம்புத்தூர் (கோசர்கள்)=
கோயம்புத்தூர்

பனங்காட்டூர் = காட்டூர்

R.S புரம் = ரத்தின சபாபதிபுரம்

சப்-அர்பன் பள்ளி = 
சபர்பன் பள்ளி









மேலும்

நன்றி தமிழே ... 25-Jun-2017 8:40 am


ஊர்களின் தேடல்
**********************

ஓய்மாநாடு
(ஓய்மானாடு) = திண்டிவனம்
தகடூர் = தர்மபுரி
திருக்கோவலூர் = திருக்கோவிலூர்
கருவூர் = கரூர்
காவிரிப்பூம்பட்டினம் = பூம்புகார்
குடந்தை = கும்பகோணம்
திருச்சிராப்பள்ளி = திருச்சி
வேணுவனம் = திருநெல்வேலி
உப்பிலியபுரம் = ஒட்டன்சத்திரம்
பழநி = பழனி
திருமுதுகுன்றம் =விருத்தாசலம்
ஆரூர் =திரு ஆரூர் =திருவாரூர் 
வன்னியபுரி =வன்னியபுரம் =கங்கை கொண்ட சோழபுரம்
அரி+இல்+ஊர்=அரியிலூர் = அரியலூர்
பெரும்பற்றப்புலியூர்=
திருசிற்றம்பலம்= சிதம்பரம்
சீகாழி=தோணிபுரம்= சீர்காழி
சென்னப்பட்டணம் = சென்னை
சிங்கபுரி=செஞ்சி
பண் உருட்டி= பண்ணுருட்டி =பண்ருட்டி
இரு ஓடை=ஈரோடு


~ தொகுத்தது நான் (பிரபாவதி வீரமுத்து )

இன்னும் ஊர்களின் தேடல்   (ஆவல் ) தொடர்ந்து கொண்டே இருக்கிறது ...
நேரமின்மையால் அதற்கு சிறிது ஓய்வு தருகிறேன்.....

மேலும்

நன்றி தமிழே ... 25-Jun-2017 8:40 am

மேலே