எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நட்பிற்காக எதை வேண்டுமானாலும் இழக்கலாம்... ஆனால் நட்பை இழக்காதே.........

மேலும்

இணைந்த கைகளை போல                   இதயமும் இணைந்தது,                                     நட்பின் இலக்கணம் படிக்க                                இமைகளும் திறந்தது                                                  சுவாசிக்க காற்றை தந்தவன்  தோல் மீத (...)

மேலும்

            நட்பு-முழு நம்பிக்கை
👯நீ உன்னை ஒரு முழு மனிதனாக உணரவேண்டும் என்றால் ஒரு உண்மையான நட்பைத் தேடிக் கொள்👯..... 
ஏனெனில் நீ செய்யும் சிறு தவறை கூட அனுமதிக்காது அந்த  உயிர்.... 
🪜ஆயிரம் முறை நீ தோல்வியை சந்தித்தாலும் உன்னை அடுத்த கட்டத்திற்கு கூட்டிச் செல்லும்🪜 😎எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி...😎

மேலும்

பூக்களுக்குத் தெரியாது!!

தெரிந்திருந்தால்,
அதுவும் சொல்லி இருக்கும்.....
உன்னைப் போல் நட்பு இருந்திருந்தால்,
நானும் விடாதிருப்பேன் என்று!!!!!

மேலும்

                       நட்பு


என் உணர்வுகளில் கரைந்த உயிரானவன் நீயாட...!!!!
உன்னையன்றி இவ்வுலகில் எனக்கேதும் வேண்டுமோ....?
என் கவலைகள் மறைவதும் உன்னிடமே ..என் மழிழ்ச்சிகள் பிறப்பதும் உன்னிடமே ...
        மாதா பிதா குரு தெய்வம் என்பார்கள் .இவ்வனைத்தும் கண்டேன் நான் உன்னிடமே...!!!
        ஒவ்வொரு நொடி பொழுதினிலும் ,என் நண்பனின் நினைவுகள் என்னை வாட்டுகின்றன ..அவனுடன் பழகிய தருணங்களின் நினைவுகள் என்னைவிட்டு நீங்காவண்ணம்,இதயத்தில் இடம்பிடித்து விட்டன...!!
             ஆனால் இன்றோ,நீ என்னை விட்டு தொலைதூரத்தில் சென்றுவிட்டாய்...
               நீ ஒரு பக்கமாய் ???நான் மறுபக்கமாய் ???நிற்கின்றோம்..!
தனிமைகள் என்னை சூழ்கின்றன..நீ இல்லாத இந்த தருணங்களில் ஆகாரம் உண்ணவும் வெருக்கின்றேன்.தாகத்திலும் தண்ணீரை தவிர்கின்றேன்
         மழிழ்ச்சியான தருணங்களும் சோகமகின்றன..
சோகத்தினால் ,விழிகளில் இருந்து உன் நினைவுகளின் தாக்கத்தினால் கண்ணீர்த்துளிகளும் அருவியாகின்றன.என்கண்ணீரை துடைக்க உன் கரங்களையே நான் நாடுகின்றேன் ..நீ இல்லாத இப்பொழுதினில் தனிமை சிறையிலே நான் வாடுகின்றேன்
       உன்னை பிரியவே முடியாது 
நான் காய்கின்றேன்.
உன்னை பிரிய வழியில்லை 
 நான் மாய்கின்றேன்.
        எத்தனை பிறவிகள் எடுத்தாலும் ,அத்தனை பிறவிகளிலும் நீ தான் என்
            "தோழனடா"

உன்னை காணாத இப்பொழுதினில் என் மனம் 
ஏங்குதடா..உன்னை காணும் அந்த தரிசனம் ஒன்றே எனக்கு போதுமடா...
               
                     I LOVE MY FRIENDS

மேலும்

                                                                               என் நட்பு

நட்பினை நாடி நதிப்போல்

    நாடெங்கும் நடமாடும்

நண்பன் நான்..

நடந்தேன்  நடந்தேன் நாட்களெல்லாம்

      ஏனோ நடக்கவில்லை

நான் நினைத்தது....

நினைத்தேன் நட்பு நல்குமென்று

     நினைவாக நிற்கின்றது

 நெஞ்சத்தில் நிரைவேராமல்...

நட்பினை நாடும் நண்பன் நான்

    நகமென்று நினைத்து நீக்கிய

 நண்பர்கள் பல...

நட்பை நாடுவது நப்பாசையாம்

    நண்பர் நற்கூற்று நல்கினார்

அதுவோ,

    நட்பினை நாடாதே..

    நட்பினை கேட்டறிந்து வாங்காதே....

    தானாக நட்பு வரவேன்டுமென்று....

நற்கூற்றானது  மனதை

    நாசமாக்கியது அன்று

நாடவில்லை நாடமாட்டேன் 

    அந்நட்பினை அன்றிலிருந்து....

தனிமையில் ...பிறகு

ஒரு நாள் பாலைவனத்தின் கழுகுக்கு

      கானல் நீர் கிடைத்தது 

 கழுகுக்கு தெரியாது ஓராண்டிற்கென்று..

      தெரிந்தால் பழகியிருக்காது....

நட்பெனும் தாகத்தை தனிக்க

     நண்பனெனும் குளம் கிடைத்தது..

தூய்மையான நட்பு .....

கண்களில் கண்ணீர் கசிகிறது

     கண்களுக்கு தெரியாமல்

ஏனோ,

கண் விழித்து உலகை பார்த்த 

     தினம் உனக்கு,

வாழ்த்து கூற முடியவில்லை என்பதாலா...........

அல்ல,

உன் நட்பானது 

       என்னிடம் இல்லை என்பதாலா...

தெரியவில்லை எனக்கு,

       கண்ணீரில் குளித்தேன் இன்று....


       

   

  


மேலும்

பள்ளியில் படித்தவளும் இல்லை!!!
கல்லூரியில் என்னுடன் கலந்தவளும் இல்லை!!!
ஐந்து வருடம், பத்து வருடம் பழகிய நட்பும் இல்லை!!!
பக்கத்து வீட்டு தோழியும் அல்ல!!! 
மாடி வீட்டு தேவதையும் அல்ல அவள்!!!
நான் இதுவரை பார்க்காத அன்பின் இராட்சசி அவள்.!!! 
அவள் என்னிடம் பேசிய "ஹலோ" என்ற வார்த்தையால், முதல் முறை அறிமுகமானேன் அவளிடம்!!!

மேலும்

தினமும் கவிதை எழுததொடங்கும் பொழுதெல்லாம் நினைவில்வந்து செல்லும் முகங்கள் இவை தான்

பார்த்த நாள் முதல் மிஞ்சியநாட்கள் வரை நட்பு என்பது பிரிக்க முடியாத உறவு

இந்த உலகில் அனைவருமே மனநோயாளிகள் தான்நண்பன் என்பவன் இல்லாவிட்டால்  நம்முள் இருக்கும் திறமைகளை நாம் அறியும் முன்னே அதை வெளியே கொண்டு வருவது இவர்களை  தவிர யாராகவும் இருக்க முடியாது

உரிமையாக பேசுவது
ஒருவரை ஒருவர் கலாய்ப்பது
எந்தவித எதிர்பார்புகளும் இன்றி  பழகுவது
குற்றம் குறை இருந்தாலும் பெரிதாக எடுத்து கொள்ளாமல் அன்பை மட்டுமே வெளிப்படுத்துவது! கள்ளம் கபடம் இல்லாத சிரிப்புகள்

ஒன்றாக அமர்ந்து கேட்கும் மெல்லிசைகள்
ஒளிவு மறைவு இல்லாத பேச்சுகள்
என இவை எல்லாம் நட்பில் மட்டுமே சாத்தியம்

நாம் வெற்றி பெற்றாலும்
சரி தோல்வி அடைந்தாலும் சரி நம்மை எப்பொழுதும் ஊக்கப்படுத்துபவர்களும் அவர்கள் தான்

தோல்விகளால் சோர்ந்து போய் தடுமாறும் பொழுதெல்லாம் "ஏய் உன்னால முடியும் முயற்சி பண்ணி பாரு"னு சொல்ற ஒரே ஆளும் அவங்கதான்

நாம் மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி சோகமா இருந்தாலும் சரி நம்ப முகத்தை வைத்தே கண்டுபிடிப்பவர்களும் அவர்கள்தான்

எவ்வளவு சோகமாக இருந்தாலும் சரி இவர்கள் நம் அருகில் இருந்தால் எல்லாமே மறந்து தான் போகிறது

பழைய நண்பனோ
புதிய நண்பனோ 
பள்ளி நண்பனோ
கல்லூரி நண்பனோ 
பிரிந்து போன நண்பனோ
மனதை உடைத்து போன நண்பனோ  ஆனால் நினைவுகள் என்றும் மாறப்போவதில்லை

மேலும்

நட்பு என்ற கடலில் மூழ்கி     

கனவு என்ற முத்தை எடுக்க வேண்டும் என்று     

அலை போன்று நான் செல்ல முத்தாக இருந்தது       

என் உயிராக இருக்கும் என் ஆருயிர் நண்பன்       

முத்தாக இருந்த உன்னை கண்டதும் எனக்கும்        

உன்  கூடவே சிற்பியாய் இருந்திட ஆசை தோன்றியது.....                              

                                                                                                  By....                                  

                                                                                                      VMS

மேலும்

நட்பென்ற உறவு
நட்பென்ற உறவு 
கிடைத்ததே கல்லூரி சென்ற பிறகு
பத்து மணித்துளி இடைவேளை
அதுவே நாங்கள் சொற்பொழிவாற்றும் வேளை
ஐவர் ஐவர் என மூன்று புறம் 
ஒருவன் மட்டும் படுவான் சிரமம் 
இதுவே எனக்கு கிடைத்த உறவு 
காசு பணம் தேடாத உறவு
நட்பென்ற உறவு…

மேலும்

மேலும்...

மேலே