எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கண்முன் ஒரு அழகிய 
குட்டி நிலா
கொதிக்கும் சூரியன்
பார்வையில்
விதியின் பாவத்தால்
குடியிருக்கிறது வீதியில்...


கெஞ்சும் குரல்கள்
பசிக்கிறது என்றது
செவிகள் கேட்டிட
கண்ணீர் கொட்டிட
உள்ளம் வலித்தது....

தெருவுக்கு தெரு
கோபுரம் உண்டு
ஆனால் இவர்களுக்கோ
ஒரு குடிசையாவது உண்டோ.!...


மாற்றம் வேண்டும்....

மேலும்

இன்னும் எத்தினை உயிரைப் பருகும்
இந்த பூமி....

உழவன் ஏங்குகிறான்
தற்கொலையே
இதற்கு உணவு
என்று
மடிந்து கொண்டிருக்கிறான்...

இதனை தெரிந்த
சில உருவமும்
கண்டும் காணாததுபோல்
சில உருவமும்
நடைபாதையில்
ஊர்ந்து கொண்டுதான் 
இருக்கிறது...

ஆனால்
பதில்
தீர்வு
எவ்விடத்தில் எங்கிருந்து
கை கொடுக்கும்
என்று நான்
காத்திருக்கிறேன் 
காத்திருக்கிறேன்...

மேகங்களே இதோ எனது
கண்ணீர்த்துளிகள் துன்பத்துடன் ஊர்ந்து 
வருகிறது
முச்சுக்காற்றில் ....


உனக்காக எங்கள்
உயிரைக் கொடுக்கிறோம்
இந்த பூமிக்காக நீயாவது
கண்ணீர் சிந்த மாட்டாயா
தாகங்களை தீர்க்க மாட்டாயா.....

மேலும்


மேலே