எந்திரன் கவிதை

ஸனா!!!!
கணிப்பொறியையும் காதலிக்க
வைக்கும் கன்னிப்பொறி!
அவள் தொட்டால் எந்திரம் மனிதன் ஆகும்!
மனிதன் எந்திரன் ஆவான்!
அவள் கூந்தல்.. கருப்பு அருவி!
நெற்றி... நறுக்கி வைத்த நிலா துண்டு !
கண்கள்... பார்ப்பவர்கள் தொலையும்
பர்முடா முக்கோணம்!
உதடுகள்... படுத்து உறங்கும் வரிக்குதிரை!
இடை... குழந்தைகள் உட்காரும்
குட்டி நாற்காலி!


கவிஞர் : நா முத்துக்குமார் (9-Mar-12, 3:05 pm)
பார்வை : 49


மேலே