என் ஆசைகள் வீண்தானா?

கண்ணாடிப் பாத்திரத்தில்
கல்லேறுபட்டது போல் --- என்
எண்ணமெனும் தேன்கலசம்
உண்ணாமல் உடைந்திடுமா? --- இன்பக்
காவியம் பொய்தானா? --- கொண்ட
காதலும் பொய்தானா? --- என்
ஆசைகள் வீண்தானா? --- இனி
அமைதியும் காண்பேனா? (இன்ப)

இது
காலத்தின் செயல்தானா? --- சுகம்
கானல் நீர் தானா?
மன நம்பிக்கை வீண்தானா? --- நான்
வெம்பிய காய்தானா? (இன்ப)

இருள் மூடிய வான்போலே
கரை ஏறிய மீன்போலே
துயர்மீறிடும் நிலையாலே
படும் வேதனை தீராதோ? --- ஒரு
பாதையும் தோணாதோ? (இன்ப)


கவிஞர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (18-Mar-11, 11:48 pm)
பார்வை : 96


பிரபல கவிஞர்கள்

மேலே