மரபுக் கவிதைகளுக்கு நடுவே ஒரு புதுக்கவிதை!

மரபுக் கவிதைகளுக்கு நடுவே
ஒரு புதுக்கவிதை!

நெடிதுயர்ந்த அடர்ந்த மரங்களுக்குள்
ஒரு போன்ஸாய்!

வீட்டுக்கு வீடு ஜன்னலில்
குடி புகுந்த புது நிலவு!

ஞான தாகத்தை லேசாய்
தீர்த்த பானகம், பருகிட
மீண்டும் தாகம் தரும் அமுதம்!

உன் புத்தகங்கள் படித்தாலும் ரத்த அழுத்தம்
படிக்காவிட்டாலும் தான்!

உன் எழுத்துக்கள் வந்தது
நன்கறிந்த தமிழ் வார்த்தையில் தான்
ஒவ்வொரு முறையும் புதுமணப்பெண்ணாய்!

சங்க இலக்கியம் போல் நீ
தந்தது தொழில்நுட்ப இலக்கியம்
பாமரனையும் பட்டதாரியாக்கினாய்!
பட்டதாரியையும் பாமரனாக்கினாய்!!

பாதரசம் போல் உன் படைப்புகள்
படிப்போரின் திறன் பொறுத்து
உருவம் பெறும்!

பழரசம் போல் உன் கருத்துக்கள்
ருசிப்போரின் ரசனை பொறுத்து
ரசிப்பு தரும்!

அருவம் ஆகி நின்றபோதும்
உருவமாய் இருக்கின்றாய்
பல நூல்களில்,

உன்னை பத்திரமாய் வளர்த்து வருவேன்,
என் அகத்தில் நூலகமாய்,
வளர்ந்த பின் என் பிள்ளை
படிக்க கொடுப்பதற்கு!


கவிஞர் : சுஜாதா (எ) ரங்கராஜன்(21-Apr-12, 1:08 pm)
பார்வை : 207


மேலே