தமிழ் கவிஞர்கள்
>>
கலாப்ரியா
>>
யாரால் செமிக்க முடியும்
யாரால் செமிக்க முடியும்
ஜெயிலுக்குப் பொறத்தால
நடக்கும் கல்யாணங்களில்
தோட்ட வேலைக்கைதிகள்
மாத்திரம்
வேலியருகே வந்து
இட்லியக் கெஞ்சி வாங்கி
மறைச்சபடி
உள்ளே ஓடற ஓட்டத்தை
யாரால்
செமிக்க முடியும்