கனவு வீடு!

கயிற்றின் மேல்
நடப்பதை போல - மிக
கவனமானது
உன்னோடான எனது உறவு!

இலவமா? ஈச்சமா?
தெரியாமலே
காத்திருக்க தொடங்கிவிட்டேன்
உன்னோடு வாழ...

மணப்பாயா?
மறுதலிப்பாயா?
படபடக்கும் இதயத்தோடு
பார்த்துக்கொண்டே இருக்கின்றேன்
நீ வரும் பாதையை....

ஒருவேளை..,
நீ வராவிட்டாலும் கூட
தயவுசெய்து கலைத்துவிடாதே..,

கடற்கரையில்
நம் குழந்தைகளோடு
நான் கட்டிக்கொண்டிருக்கும்
எனது "கனவு வீட்டை"!!


கவிஞர் : வாணிதாசன்(6-Aug-12, 4:11 pm)
பார்வை : 0


மேலே