தோத்திரப் பாடல்கள் காளிப் பாட்டு

யாது மாகி நின்றாய்-- காளி
எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மை யெல்லாம்-- காளி
தெய்வ லீலை யன்றோ?
பூத மைந்தும் ஆனாய் -- காளி
பொறி களைந்தும் ஆனாய்
போத மாகி நின்றாய்-காளி
பொறியை விஞ்சி நின்றாய்.
1


இன்ப மாகி விட்டாய் -- காளி
என்னுளே புகுந்தாய்
பின்பு நின்னை யல்லால் -- காளி
பிறிது நானும் உண்டோ?
அன்ப ளித்து விட்டாய் -- காளி
ஆண்மை தந்து விட்டாய்
துன்பம் நீக்கி விட்டாய் -- காளி
தொல்லை போக்கி விட்டாய்.








2


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(26-Oct-12, 10:55 am)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே