வேதாந்தப் பாடல்கள் ஜய பேரிகை

ஜய பேரிகை கொட்டடா -- கொட்டட
ஜய பேரிகை கொட்டடா! (ஜய)



சரணங்கள்

பயமெனும் பேய்தனை யடித்தோம் -- பொய்ம்மைப்
பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்
வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம்.
(ஜய பேரிகை) 1

இரவியி னொளியிடைக் குளித்தோம்-ஒளி
இன்னமு தினையுண்டு களித்தோம்
கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்
காலன் நடுநடுங்க விழித்தோம். (ஜய பேரிகை) 2

காக்கை, குருவி எங்கள் ஜாதி -- நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;
நோக்க நோக்கக் களியாட்டம். (ஜய பேரிகை) 3


[பாட பேதம்]: ?துன்பப்?
பா. க.-8


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(26-Oct-12, 11:58 am)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே