தினையின் மீது பனை நின்றாங்கு

தினையின் மீது பனை நின்றாங்கு
மணிச்சிறு மீன்மிசை வளர்வால் ஒளிதரக்
கீழ்த்திசை வெள்ளியைக் கேண்மை கொண்டிலகும்
தூம கேதுச் சுடரே, வாராய்.
எண்ணில்பல் கோடி யோசனை யெல்லை



5

எண்ணிலா மென்மை இயன்றதோர் வாயுவால்
புனைந்தநின்னொடுவால் போவதென் கின்றார்.
மண்ணகத் தினையும் வால்கொடு தீண்டி
ஏழையர்க் கேதும் இடர்செயா தேநீ
போதி யென்கின்றார்; புதுமைகள் ஆயிரம்


10

நினைக்குறித் தறிஞர் நிகழ்த்துகின் றனரால்.
பாரத நாட்டில் பரவிய எம்மனோர்
நூற்கணம் மறந்துபன் னூறாண் டாயின;
உனதியல் அன்னியர் உரைத்திடக் கேட்டே
தெரிந்தனம்; எம்முளே தெளிந்தவர் ஈங்கில்லை
15

வாராய், சுடரே! வார்த்தைசில கேட்பேன்:
தீயர்க் கெல்லாம் தீமைகள் விளைத்துத்
தொல்புவி யதனைத் துயர்க்கட லாழ்த்தி நீ
போவையென்கின்றார்; பொய்யோ, மெய்யோ
ஆதித் தலைவி யாணையின்படி நீ
20

சலித்திடுந் தன்மையால், தண்டம் நீ செய்வது
புவியினைப் புனிதமாப் புனைதற் கேயென
விளம்புகின்றனர்; அது மெய்யோ, பொய்யோ?
ஆண்டோர் எழுபத் தைந்தினில் ஒருமுறை
மண்ணைநீ அணுகும் வழக்கினை யாயினும்,
25

இம்முறை வரவினால் எண்ணிலாப் புதுமைகள்
விளையுமென் கின்றார்; மெய்யோ, பொய்யோ?
சித்திகள் பலவும் சிறந்திடு ஞானமும்
மீட்டும்எம் மிடைநின் வரவினால் விளைவதாப்
புகலுகின்றனர்; அது பொய்யோ, மெய்யோ?
30

பு{ இது 1910-1911இல் நிகழ்ந்த நிகழ்ச்சியைக் குறிக்கிறது.}


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(26-Oct-12, 12:37 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே