பல்வகைப் பாடல்கள் வண்டிக்காரன் பாட்டு

அண்ணனுக்கும் தம்பிக்கும் சம்பாஷணை

“காட்டு வழிதனிலேஅண்ணே! கள்ளர் பயமிருந்தால்?”“எங்கள்
வீட்டுக் குலதெய்வம் தம்பி வீரம்மை காக்குமடா!”
“நிறுத்து வண்டி யென்றே கள்ளர் நெருங்கிக் கேட்கையிலே எங்கள்
கறுத்த மாரியின் பேர் சொன்னால் காலனும் அஞ்சுமடா!”


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(26-Oct-12, 2:35 pm)
பார்வை : 0


மேலே