நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம்மாறி நீந்துகின்ற குழலோ

மாதுளையின் பூப்போலே மலருகின்ற இதழோ
மாதுளையின் பூப்போலே மலருகின்ற இதழோ
மானினமும் மீனினமும் மயங்குகின்ற விழியோ
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ
நீந்துகின்ற குழலோ

புருவமொரு வில்லாக பார்வையொருக் கணையாக
புருவமொரு வில்லாக பார்வையொருக் கணையாக
பருவமொரு களமாகப் போர் தொடுக்கப் பிறந்தவளோ
குறு நகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில்
குறு நகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில்
தேன் சுவையைத் தான் குழைத்து
கொடுப்பதெல்லாம் இவள் தானோ

பவழமென விரல் நகமும் பசுந்தளிர் போல் வளை கரமும்
தேன் கனிகள் இருபுறமும் தாங்கி வரும் பூங்கொடியோ
ஆழ்கடலின் சங்காக நீள் கழுத்து அமைந்தவளோ
ஆழ்கடலின் சங்காக நீள் கழுத்து அமைந்தவளோ
யாழிசையின் ஒலியாக வாய்மொழி தான் மலர்ந்தவளோ

செந்தழலின் ஒளி எடுத்து சந்தனத்தின் குளிர் கொடுத்து
பொன் தகட்டில் வார்த்து வைத்த
பெண்ணுடலை என்னவென்பேன்
மடல் வாழைத் துடையிருக்க மச்சம் ஒன்று அதிலிருக்க
மடல் வாழைத் துடையிருக்க மச்சம் ஒன்று அதிலிருக்க
படைத்தவனின் திறமை எல்லாம்
முழுமை பெற்ற அழகியென்பேன்...


கவிஞர் : கவிஞர் வாலி(6-Dec-12, 1:32 pm)
பார்வை : 0


மேலே