தொட தொட மலர்ந்ததென்ன

தொட தொட மலர்ந்ததென்ன

பூவே தொட்டவனை மறந்ததென்ன?

(தொட தொட)

பார்வைகள் புதிதா? ஸ்பரிசங்கள் புதிதா?

மழை வர பூமி மறுப்பதென்ன?

(பார்வைகள்)

(தொட தொட)

அந்த இள வயதில் ஆற்றங்கரை மணலில்

காலடி தடம் பதித்தோம்.. யார் அழித்தார்?

நந்தவன கரையில் நட்டு வைத்த செடியில்ல்

மொட்டு விட்ட முதல் பூவை யார் பறித்தார்?

காதலன் தீண்டாத பூக்களில் தேனில்லை

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை

(தொட தொட)

பனிதனில் குளித்த பால்மலர் காண

இருபது வசந்தங்கள் விழி வளர்த்தேன்

பசித்தவன் அமுதம் பருகிடத் தானே

பதினேழு வசந்தங்கள் இதழ் வளர்த்தேன்

இலை மூடும் மலராக இதயத்தை மறைக்காதே

மலர் கொல்லும் காற்றாக இதயத்தை உலுக்காதே

(தொட தொட)


கவிஞர் : வைரமுத்து(3-Jan-13, 12:39 pm)
பார்வை : 0


மேலே