சந்தியா சந்தியா

சந்தியா சந்தியா

சம்மதம் சொல்வாயா

சந்தியா சந்தியா

சஞ்சலம் கொல்வாயா

நென் நெஞ்சின் ஆசை சொல்லவா

நெஞ்சோடு மூடி கொள்ளவா

(சந்தியா..)



கங்கையா நீ காணலா

இது காதலா வெறும் வேஷமா

வேர்களா நீ பூக்களா

என் வெண்ணிலா பதில் பேசுமா

சொல்லாத சொல்லுக்கு

பொருள் ஒன்றுக்கு கிடையாது

நான் கொண்ட நேசத்தின்

திறன் என்ன தெரியாது

(சந்தியா..)



காதலே என் காதலே

ஒரு ஊமையாய் என்னை மாற்றினாய்

மேகமாய் நான் வாழ்ந்தவன்

தனி தீவிலே என்னை பூட்டினாய்

விடிகாலை நேரத்தில்

குயிலுக்கு உற்சாகம்

எதிர் கூவல் கேளாமல்

என் நெஞ்சில் ஒரு சோகம்..

(சந்தியா..)


கவிஞர் : வைரமுத்து(3-Jan-13, 2:14 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே