கப்பலேறிப் போயாச்சு

கப்பலேறிப் போயாச்சு சுத்தமான ஊராச்சு கண்ணம்மா

நட்டநடு ராவாச்சு நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா

விடியும் வரையில் போராடினோம் உதிரம் நதியாய் நீராடினோம்

வைக்கல் எல்லாம் வாளாச்சு துக்கம் எல்லாம் தூளாச்சு கண்ணம்மா

கண்ணம்மா.... நம்ம வாசல் தேடி சாரல் வரும்

மெதுவானம் தூவும் தூறல் வரும்

வாழ்வில் சூழ்ந்த சோகம் யாவும் இப்ப (கப்பலேறிப் போயாச்சு)





வண்ணமான் வஞ்சிமான் நீர்க்கோலம் கண்களால் கன்னத்தில் போட

இன்னுமா இன்னுமா போர்க்கோலம் இங்குநீ அங்குநான் போராட

உனைக் கேட்டா என் நெஞ்சை அள்ளிக் கொடுத்தேன்

தினம் நான் தான் என் அன்பே முள்ளில் படுத்தேன்

நானோர் தீவாய் ஆனேன் வாவா அம்மம்மா நாளெல்லாம்

கானல் நீரைக் குடித்தேன்

இப்ப (கப்பலேறிப் போயாச்சு)



லாலா லாலா லாலலலலா லாலாலாலா லாலா லாலலலலா

அன்னமே அன்னமே நான் சொல்லி வந்ததா தென்றலும் நேற்று

உன்னையே உன்னையே நான் எண்ணி வெந்ததைச் சொன்னதா பூங்காற்று

உந்தன் காலில் மெட்டி போல் கூட நடப்பேன்

உந்தன் கண்ணுக்கு கண்ணீர் போல் காவல் இருப்பேன்

மாலை சூடி தோளில் ஆடி கைதொட்டு மெய்தொட்டு

உன்னில் என்னைக் கரைப்பேன்

இப்ப (கப்பலேறிப் போயாச்சு)


கவிஞர் : வைரமுத்து(3-Jan-13, 2:30 pm)
பார்வை : 0


மேலே