இதோ இதோ என் பல்லவி

இதோ இதோ என் பல்லவி

எப்போது கீதமாகுமோ

இவள் உந்தன் சரணமென்றால்

அப்போது வேதமாகுமோ

(இதோ..)



என் வானமெங்கும் பௌர்ணமி

இது என்ன மாயமோ

என் காதலா உன் காதலா

நான் காணும் கோலமோ

என் வாழ்க்கை என்னும் கோப்பையில்

இது என்ன பானமோ

பருகாமலே ருசியேறுதே

இது என்ன ஜாலமோ

பசியென்பதே ருசியல்லவா

அது என்று தீருமோ

(இதோ..)



அந்த வானம் தீர்ந்து போகலாம்

நம் வாழ்க்கை தீருமா

பருவங்களும் நிறம் மாறலாம்

நம் பாசம் மாறுமா

ஒரு பாடல் பாட வந்தவள்

உன் பாடலாகிறேன்

விதி மாறலாம் உன் பாடலில்

சுதி மாறக் க்ஊடுமா

நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை

பொருந்தாமல் போகுமா

(இதோ..)


கவிஞர் : வைரமுத்து(3-Jan-13, 2:46 pm)
பார்வை : 0


மேலே