என்னமோ ஏதோ கோ

என்னமோ ஏதோ
எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிறழுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்

என்னமோ ஏதோ
முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில்
மொட்டு அவிழுது கொடியில்

ஏனோ
குவியமில்லா...
குவியமில்லா ஒரு காட்சிப் பேழை!
ஏனோ
உருவமில்லா...
உருவமில்லா நாளை!

ஏனோ
குவியமில்லா...
குவியமில்லா ஒரு காட்சிப் பேழை!
ஏனோ அரைமனதாய்
விடியுது என் காலை!

என்னமோ ஏதோ…
மின்னிமறையுது விழியில்
அண்டிஅகலுது வழியில்
சிந்திச் சிதறுது வெளியில்

என்னமோ ஏதோ...
சிக்கித் தவிக்குது மனதில்
றெக்கை விரிக்குது கனவில்
விட்டுப் பறக்குது தொலைவில்

ஏனோ குவியமில்லா
குவியமில்லா - ஒரு காட்சிப் பேழை!
ஏனோ உருவமில்லா
உருவமில்லா நாளை!

நீயும் நானும் எந்திரமா?
யாரோ செய்யும் மந்திரமா?
பூவே!

முத்தமிட்ட மூச்சுக் காற்று
பட்டுப் பட்டுக் கெட்டுப்போனேன்
பக்கம் வந்து நிற்கும் போது
திட்டமிட்டு எட்டிப் போனேன்

நெருங்காதே பெண்ணே எந்தன்
நெஞ்செல்லாம் நஞ்சாகும்
அழைக்காதே பெண்ணே எந்தன்
அச்சங்கள் அச்சாகும்

சிரிப்பால் எனை நீ
சிதைத்தாய் போதும்

சுத்திச் சுத்தி உன்னைத் தேடி
விழிகள் அலையும் அவசரம் ஏனோ?

சத்த சத்த நெரிசலில் உன் சொல்
செவிகள் அறியும் அதிசயம் ஏனோ?

கனாக்காணத் தானே பெண்ணே
கண்கொண்டு வந்தேனோ?
வினாக்கான விடையும் காணக்
கண்ணீரும் கொண்டேனோ?

நிழலை திருடும்
மழலை நானோ?


கவிஞர் : மதன் கார்க்கி வைரமுத்து(2-May-14, 12:18 pm)
பார்வை : 0


மேலே