காமம் செப்பாது

பாசம் நேசம் பரிவு அன்பு நட்பு
யாவற்றினுள்ளும் சுருண்டு கிடக்கும்
காமம் என்னும் ராஜ வெம்பாலை
நலிந்து வசமாய் வாய்த்த வட்டம்
பிரிய ஊக்கம் அற்று
படம் விரித்து கூசி நின்றது

காதல் எனும் சொல்லுரைக்க
பிளவு பட்ட நா நீட்டித் துழாவும்
சரசரவெனச் சுருள் பிரியும்
இழுத்து வாங்கிய காற்றில் பை நிரப்பிப்
படம் எடுக்கும்

காமத்துப் பாம்பில் வாலிபமென்ன வயசென்ன
ஆணென்ன பெண்ணென்ன
அழகென்ன அதிரூபமென்பதென்ன
பரமசிவன் கழுத்தில் படமெடுத்து ஆடுவது
உடலா மனமா?


கவிஞர் : நாஞ்சில் நாடன்(2-May-14, 3:54 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே