ஒரு நாள்

ஒரு நாள்

என் தோலைக் கழற்றி வீசினேன்

கூந்தலை உரித்து எறிந்தேன்

துவாரங்களில் ரத்தம் ஒழுகும்

மொழுக்கைப் பெண்ணென காதல் கொள்ள அழைத்தேன்

காதலர்கள் வந்தார்கள்

கரிய விழிகள் கொணட அவர்கள்

நெய்தலின் நுட்பம் கூடிய சிலந்திகள்

குருதியை நூலாக்கித் திரித்து

செந்நிறத்தின் ஊடுபாவிய வலையை

எட்டுக் கால்களில் விரித்தார்கள்

அந்தியில் வந்த சூரியன் சிவப்பில் விழுந்தான்

அப்பொழுதும் சொன்னேன்

நான் பூரணமாய் காதலிக்கப்பட்டவள்

மறுபடி நானே

உலகின் அழகிய முதல் பெண்


கவிஞர் : லீனா மணிமேகலை(2-May-14, 5:59 pm)
பார்வை : 0


மேலே