காட்சி

வரப்பு
காக்கிப் பயிர்
கம்பி குத்தி
நெட்டைக் கம்பம்
கேடயம்
வாள்
குறுக்கில் விரையும் பறவை
உதைக்கும் சப்தம்
சப்தத்தில் பூமி
ஒரு மீசை
பூசப்பட்ட வானம்
நகராத புரவி
நகர்ந்து போன பகை
நெல்லுப்பயிர்
கள்ளு குடி
குளத்துப்படிக்
கட்டில் வெட்டுப்
புண்ணில் சொட்டு
ஸ்வஸ்தி ஸ்ரீ
ராஜாதி ராஜர்க்கு
யாண்டு…
யாண்டு?
அல்லிப் பூவில்
ரத்தக கறை
சூரியனின்
சேப்புத் தலை
தோப்பு
தெம்மாங்கு
தலை முழுகிய
தண்ணீர்
அலை இடி
அலை இடி
அலை
தலை
அலை
தலை
அலை
தலை
அலை
பொம்மைக் குதிரை
ஆசைப்பட்டுக் கனைச்சு
வர்ணம் உதிர்ந்து போச்சு


கவிஞர் : ஞானக்கூத்தன்(9-Sep-14, 3:35 pm)
பார்வை : 0


மேலே