கடற்கரையில் சில மரங்கள்

கடற் கரையில் சில
மரங்க ளென்று நான்
கவிதை எழுத நினைத்திருந்
தேன். எதையும் நி
னைத்ததும் மு
டிக்க வேண்
டும். மு
டிக்க வில்லை யென்றால் ஏ
தும் மாற் றம் ஆ
கிவிடும். அம் ம
ரத்திலொன்றை இன்று நி லைகு லையச் சாய்த்து
தொடர்ந்து பி
ளந்து தொ
டர்ந்து வா
ளாலறுத்
துத் துண்
டுதுண்
டுதுண்
டுதுண்
டாக்கிக் கி
ளைமு
றித்துப் பூ
சிதறி இ
லை சிதறி
எங்கும் அம்மணம் இளவெயிலில் துலங்க
கோடரி குதிக்கத் தூள் தூள் எழுப்ப
நெடுகக் கிடந்த அம்மரப் பெருமையைக்
காற்றுக் கூறக்
கடற்கரையில் சில
மரங்கள்
மை குழம்பிய நீள் இமை சோரும்
தங்கள் மேல்கள் தளர்வுற விம்மும்
யூக லிப்டஸ் தோப்பின்
பிருஷ்டபா
கங்கள் தவிக்கும்
பூமிக் கடியில் விதைகள் ஒருசில
மண்ணைத் தள்ளிக் கொண்டு தங்கள்
வெள்ளைச் சிறுவாய் அகட்டிப் பார்க்கும்
கொடிகள் தளர கொன்றை நின்றன
புள்ளி காணா வியப்புக்
குறிகள் ஏராளம் தம்மிடம் தொங்க.


கவிஞர் : ஞானக்கூத்தன்(9-Sep-14, 3:36 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே