தெய்வமே என்னைக் கைவிட்டு விடாதே!

தெய்வமே,
உன்னை என் இதயத்திலிருந்து
வெளியேற்றிவிட்டு,
ஒரு பெண்ணைக்
குடிவைத்ததற்காகக்
கோபித்துக்கொண்டு
என்னைக் கைவிட்டு விடாதே!

உன்னால்
தூணிலோ, துரும்பிலோகூட
வாசம் செய்ய முடியும்.
அவளால் முடியுமா?


கவிஞர் : தபு ஷங்கர்(23-Sep-15, 4:42 pm)
பார்வை : 0


மேலே