பாலூட்ட வந்த அன்னை

குத்து விளக்காய் வளர்ந்த குழந்தைக்குப்
புத்தமு தூட்டுவதார்? – அந்தப்
புகழினை ஈட்டுவதார்?

உத்தம அலிமா செவிலித் தாய்க்குக்
கிடைத்தது நல வாய்ப்பு – கையில்
கிண்கிணிப் புன்னகைப் பூ.

தந்தையில் லாத அனாதைக் குழந்தைக்குத்
தந்தார் பாலமுது – அலிமா
தாய்க்கோ பொன்மனது!

சந்திரப் பிறையாய் சந்தன மணமாய்
முகமது வளர்கின்றார் – ஆமினா
‘அகமது’ என்கின்றார்!


கவிஞர் : மு. மேத்தா(11-Apr-11, 9:03 pm)
பார்வை : 154


மேலே