தோழியடி நீ எனக்கு...

ஒரு நள்ளிரவில்
கதவு தட்டும் ஒலிகேட்டு
வந்து திறந்தேன்
காதலனோடு
கைபிடித்தபடி
சோர்ந்த முகத்தோடு
நின்றாய்
போய் வருகிறேன்
அடுத்த வாரம் சந்திக்கலாம்
என்று புறப்பட்ட
காதலனுக்குக் கையசைத்தாய்
என் தோளில்
சாய்ந்தபடி


கவிஞர் : அறிவுமதி(12-Apr-11, 9:57 pm)
பார்வை : 275


பிரபல கவிஞர்கள்

மேலே