அன்பு செய்தல்
இந்தப் புவிதனில் வாழு மரங்களும்
இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
ஔடத மூலிகை பூண்டுபுல் யாவையும்
எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ?
வேறு
மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்புகட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்கு மன்றோ?
யானெ தற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர்
என்மதத்தைக் கைக்கொண்மின்,பாடுபடல் வேண்டா;
ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்!
எழுதியவர் :சுப்பிரமணிய பாரதி
நாள் :2011-01-14 13:19:29
உங்கள் கவிதை சமர்ப்பிக்க
| நண்பர்களும் பார்க்கக |
 |
Share
|
|
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்
Random கவிதைகள்
கவிதைகள்
இதர படைப்புகள்
இதையும் பார்க்கலாம்

Top Contributors
Top Contributors of this Month
Join Us on 
|