நறுக்குகள் - இலக்கியம்

களத்தில்
நிற்கிறேன்...

என்
இலக்கியத்தில்
அழகில்லை
என்கிறாய்.

தோரணம்
கட்டும்
தொழிலோ
எனக்கு?

வாளில்
அழகு தேடாதே
கூர்மை பார்.


கவிஞர் : காசி ஆனந்தன்(7-May-11, 8:07 pm)
பார்வை : 70


மேலே