கண்ணீர் பூக்கள்

ஒரே ஒரு விஷயத்தில் மட்டும்
இந்த நாட்டு மக்கள்
உன்னை
அப்படியே பின்பற்றுகிறார்கள்
அரைகுறையாகத்தான்
உடுத்துகிறார்கள்
தேசம் போகிற
போக்கைப் பார்த்தால்
பிறந்த நாள் உடையே
எங்கள்
தேசிய உடையாகி விடும்போல்
தெரிகிறது


கவிஞர் : மு. மேத்தா(2-Nov-11, 2:18 pm)
பார்வை : 240


மேலே