சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திடக் கண்டேனே
மொட்டு விரிந்த மலரினிலே வண்டு முழ்கிடக் கண்டேனே
மூங்கிலிலே கற்று வந்து மோதிடக் கண்டேனே

பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கொரு சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே
எடுத்து சொல்ல மனமிருந்தும் வரத்தை வரவில்லையே
என்னென்னவோ நினைவிருந்தும் ஞானம் விடவில்லையே .. ஹோய் ...

ஒரு பொழுது மலராக கோடியில் இருந்தேனா
ஒரு தடவை தென் கொடுத்து மடியில் விழுந்தேனா
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா
இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா .. ஹோய்..


கவிஞர் : கண்ணதாசன்(3-Dec-11, 3:52 pm)
பார்வை : 187


பிரபல கவிஞர்கள்

மேலே