காதோடுதான் நான் பாடுவேன்

காதோடுதான் நான் பாடுவேன்
மனதோடுதான் நான் பேசுவேன்
விழியோடுதான் விளையாடுவேன் - உன்
மடிமீதுதான் கள் மூடுவேன்

வளர்ந்தாலும் நானின்னும் சிறுபிள்ளைதான் - நான்
அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்
உனக்கேற்ற துனையாக எனை மாற்ற வா - குல
விளக்காக நான் வாழ வழி காட்ட வா

பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது - இதில்
யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது


கவிஞர் : கவிஞர் வாலி(3-Dec-11, 4:03 pm)
பார்வை : 176


மேலே