யாருமில்லை

கூடத்திலே வந்த மாடப்புறா! -- கூடிக்
கொஞ்சும் கிளி என்னை வஞ்சிப்பதா?
கூடத்திலே வந்த மாடப்புறா?

மன மாடத்தில் எரியும் மணிவிளக்கே!
வாராய் என் பசிக்கே உணவளிக்க,
கூடத்திலே வந்த மாடப்புறா!

கோடைதனைத் தணிக்கும் மலர்ச்சோலை -- உன்
கூந்தல் பறக்குமா என்மேலே?
ஆடை அழைத்ததடி நமை மாலை
அதைவிட உனக்கிங்கே என்ன வேலை?
கூடத்திலே வந்த மாடப்புறா!

சிரிப்புக்கு முகத்தினில் என்ன பஞ்சம்?
தீயாய் இருக்குமோடி உன் நெஞ்சம்!
திருப்படி சேயிழை உன் முகத்தைக் கொஞ்சம்
சிலம்பு பாடும் அடிக் கடியேன் தஞ்சம்!
கூடத்திலே வந்த மாடப்புறா!

தானே கனியவேண்டும் நெஞ்சக்கனி
தடிகொண்டு கனிவிக்கலாமோ? இனி
மானே, அகப்பட்டாய் என்னிடத்தினில்
வா நாம் இவ்விடத்தில் தன்னந் தனி!
கூடத்திலே வந்த மாடப்புறா!


கவிஞர் : பாரதிதாசன்(4-Jan-12, 7:08 pm)
பார்வை : 33


மேலே