வெறிகொண்ட தாய்

பேயவள் காண் எங்கள் அன்னை - பெரும்
பித்துடையாள் எங்கள் அன்னை
காய்தழல் ஏந்திய பித்தன்- தனைக்
காதலிப்பாள் எங்கள் அன்னை.

இன்னிசை யாம் இன்பக் கடலில் - எழுந்து
எற்றும் அலைத்திரள் வெள்ளம்
தன்னிடை மூழ்கித் திளைப்பாள் - அங்குத்
தாவிக் குதிப்பாள் எம் அ‎‎‎‎‎‎‎ன்னை.

தீஞ்சொற் கவிதையஞ் சோலை - தனில்
தெய்வீக நன்மணம் வீசும்
தேஞ்சொரி மாமலர் சூடி - மது
தேக்கி நடிப்பாள் எம் அன்னை.

வேதங்கள் பாடுவள் காணீர் - உண்மை
வேல்கையிற் பற்றிக் குதிப்பாள்
ஓதருங் சாத்திரம் கோடி - உணர்ந்
தோதி யுலகெங்கும் விதைப்பாள்.

பாரதப் போரெனில் எளிதோ? - விறற்
பார்த்தன்கை வில்லிடை ஒளிர்வாள்
மாரதர் கோடிவந் தாலும் - கணம்
மாய்த்துக் குருதியில் திளைப்பாள்.


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(3-Feb-12, 9:45 am)
பார்வை : 16


மேலே