ஆண்மை அற்ற சவுதியர்களின் காட்டுமிராண்டித்தனம்....?
ஆண்மை அற்ற சவுதியர்களின் காட்டுமிராண்டித்தனம்....?
சகோதரி ரிசானா நபீகிற்கு ஆண்மை அற்ற காட்டுமிராண்டி சவூதி அரசு நிறைவேற்றியுள்ள மரண தண்டனையை மனித உரிமைப் போராளிகள் மட்டுமின்றி முஸ்லிம் அறிஞர்கள்இ மார்க்க நெறியை மீறாத முஸ்லிம்களெனப் பலரும் கண்டிக்கின்றனர்.
இதே ஒரு அமெரிக்கர்களுக்கோ அல்லது ஐரோப்பியர்களுக்கோ அந்த தண்டனையை இந்த அரசு ஒரு போதும் வழங்கியிருக்காது.
அப்படி செய்திருந்தால் அதன் பின் விளைவுகள் என்ன என்பதை அறிந்தவர்கள் இந்த ஆண்மை அற்றவர்கள். மார்க்கத்தின் பல நெறிகளை மறந்துவிட்டு ஒரு சில கட்டுப்பாடுகளை மட்டும் மதம் எனும் போர்வையில் இயலாதவர்கள் மீது மட்டும் திணிக்கின்றார்கள் இந்த மத காட்டுமிராண்டிகள்.
சிங்கள பயங்கரவாத அரசும் இதை ஒருபோதும் தட்டிக் கேட்காது என்பதை நன்கு அறிந்துள்ளார்கள் சவுதியர்கள் ஏனெனில் சிங்கள பயங்கரவாத அரசு புரிந்த கொடுமைகளை விட இது ஒன்றுமில்லை என்றபோதும் இது பல ஆயிரம் மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இத்தகைய மத காட்டுமிராண்டிகள் பல மதங்களிலும் காணப்பட்டாலும் சவுதி போன்ற நாடுகளில் சட்டங்களில் இப்படிப்பட்ட சிறிதும் மனிதாபிமானம் அற்ற காட்டுமிராண்டித்தனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கண்டனம் விட்ட ஐ.நா கூட வெறும் கண்டனத்துடன் ஒதிங்கிவிடாது ஏதும் மாற்றம் செய்யும் என எதிர்பார்க்க முடியாது.
- பரமேஸ்வரன் சுப்பிரமணியன் -
உண்மையில் சவூதி அரசு அதாவது மன்னர் அப்துல்லா குடும்பம் மற்றும் இவர்களின் வாரிசுகள் கலைஞர் கருணாநிதியின் குடும்பங்களை விட மிகப்பெரிது. அரசு மற்றும் அரசு எந்திரங்கள் முழுதும் நீக்கமற நிறைந்துள்ளார்கள். தொழில், அரசியல், மதம் என்று எங்கு நோக்கினும் இவர்களின் இந்த மன்னரின் குடும்பங்கள் தான்.உலகில் உள்ள அரேபியர்களுக்கு, அரபிய மக்களுக்கு எதிரானவர்களாக, கொடும் சட்டங்களை இயற்றிக் கொண்டு வளம் கொழிக்கும் சவுதியின் செல்வங்களை அமெரிக்காவில் கொண்டு போய் குவித்து வைத்துள்ளார்கள்.
எவ்வாறு எகிப்தின் முபாரக், லிபியாவின் கடாபி இவர்கள் எல்லாம் தங்கள் நாட்டின் வளங்களை அப்படியே தங்கள் பெயரில் வைத்துள்ளார்களோ அதற்கு சற்றும் அல்ல இவர்களுக்கு எல்லாம் மிக முன்னோடியாக, வலம் வந்து கொண்டிரிக்கிரார்கள் சவுதியின் அரச குடும்பம்.
அமெரிக்க அரசு மிக கவனமாக இருக்கிறது பாலைவனத்தின் வசந்தம் என்று யாரும் போராடி விடக்கூடாது என்பதில்.
சுவூதி நாட்டின் சவூதி மக்களின் விடுதலை ஒன்று மட்டுமே அரபியர்களின் வாழ்வை, அவர்களின் உண்மையான சகோதரத்தை நிலை நாட்ட முடியும்.
- சங்கிலிக்கருப்பு -