சூரிய குடும்பத்தின் ஏழு அதிசயங்கள் !

எழாம் அதிசயம்: என்ஸெலேடஸ்.

சனி கிரகத்தின் அறுபத்து இரண்டு அறியப்பட்ட நிலவுகளில் என்ஸெலேடஸும் ஒன்றாகும். அதில் உள்ள அதிசய எரிமலைகளின் காரணமாக, என்ஸெலேடஸ் சூரிய குடும்பத்தின் மற்ற எந்த ஒரு நிலவையும் விட தனித்து விழங்குகின்றது. இதன் எரிமலைகள் தீக்குழம்பினை கக்குவது இல்லை. மாறாக இவை நீர் மற்றும் பனியை கக்குகின்றது.

ஆறாம் அதிசயம்: சனி வளையங்கள்.

சனியின் வளையங்கள் 1610 இல் இத்தாலிய விஞ்ஞானி 'கலிலியோ கலிலி' யால் கண்டுபிடிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை அவை ஒரு அதிசயத்தின் சின்னமாகவே விழங்குகின்றது. அவை கூழாங்கல்லில் தொடங்கி மலை வரை வெறுபட்ட அள‌வுக‌ளை கொண்ட கற்களால் ஆனவை. இந்த வளையங்களின் மொத்த‌ திணிவு 35 டிரில்லியன் டிரில்லியன் டன்கள் ஆகும். அதாவது 35 000 000 000 000 000 000 000 000 டன்கள் ஆகும்.

ஐந்தாம் அதிசயம்: வியாழனின் பெரிய சிவப்பு புள்ளி.

வியாழன் தான், சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களில் மிக பெரிய கோள் ஆகும். இங்கு பல நூறு வருடங்களுக்கு மெலாக நீடித்து வரும் ஒரு மாபெறும் புயல்தான், வியாழனின் 'பெரிய சிவப்பு புள்ளி' என்று அழைக்கப்பட்டு வருகின்றது. இது ஐந்து மைல் உயரமும் அளவில் மூன்று பூமியை விட பெரியதாகவும் விளங்குகின்றது.

நான்காம் அதிசயம்: சூரிய குடும்பத்தின் சிறுகோள் பட்டை.

சூரிய குடும்பத்தில் நான்காவது அதிசயம் செவ்வாய் மற்றும் வியாழன் இடையே அமைந்துள்ள சிறுகோள் பட்டை ஆகும். இந்தப் பட்டை நூறு மில்லியன் மைல்களுக்கு பாறைகளால் ஆனது. இந்தப் பாறைகளில் சில, கற்களை போன்று சிறியதாக‌ இருக்கும். மற்றும் சில பாறைகள் ஒரு நகரத்தை விட பெறியதாகவும் இருக்கும். சிறுகோள் பட்டையில் உள்ள ஒரேயொரு குறுங்கோள் 'செரசு' எனும் குறுங்கோள். இந்தக் குறுங்கோளின் திணிவு தோராயமாக சிறுகோள் பட்டையின் மொத்த திணிவில் கால் பங்கு எனலாம்.

மூன்றாம் அதிசயம்: ஒலிம்பஸ் மோன்ஸ், செவ்வாய்.

செவ்வாய் கோளில் உள்ள 'ஒலிம்பஸ் மோன்ஸ்' என்பது, சூரிய குடும்பத்தில் உள்ள மிக பெரிய எரிமலை ஆகும். இது எவரெஸ்ட் சிகரத்தை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு உயரமானது. இது ஹவாய் தீவில் உள்ள பூமியின் மிகப்பெரிய எரிமலை 'மவுனா லோ' வை விட நூறு மடங்கு கன அளவு கொண்டதாகும்.

இறண்டாம் அதிசயம்: சூரியன் (ஞாயிறு).

சூரிய குடும்பத்தின் இறண்டாம் அதிசயம் சூரியன்தான், குறிப்பாக அதன் மெற்பரப்பு. சூரியன் வெறு எந்த ஒரு கொளையும் போல் இல்லாமல், பெருமளவில் ஐதரசன் மற்றும் ஈலியம் வாயுக்களாலேயே ஆனது. இதன் மேற்பரப்பு உஷ்ண‌ம் சுமார் பத்து ஆயிரம் டிகிரி ஆகும். மெலும் இதன் ஆற்றல் ஒரு பில்லியன் டன்கள் டிஎன்டி க்கு சமமானது. உயர்ந்த வெப்பநிலையினால் சூரியனில் உள்ள எல்லாப் பொருட்களும் வளிமம், அல்லது பிளாசுமா வடிவிலேயே உள்ளன. இதனால், சூரியனின் நடுக்கோட்டுப் பகுதியின் வேகம் உயர் குறுக்குக் கோட்டுப் பகுதியின் வேகத்திலும் கூடிய வேகத்தில் சுழல்கிறது. சூரியன் காந்தச் செயற்பாடு கொண்ட ஒரு விண்மீன். அதன் காந்தப் புலம் ஆண்டு தோறும் மாற்றமடைந்து, ஒவ்வொரு 11 ஆண்டும் திசை மாற்றம் அடைகின்றது. இது பிற‌ கொள்களிலும் மாறுதல்களை ஏற்படுத்தும் வலிமை கொண்டது. சூரியனில் உள்ள சூரியமரு, சூரிய எரிமலை, சூரிய சூறாவளி. சூரியப் புள்ளிகள், சூரியத் தீக்கொழுந்து, ஆகியவை இன்னும் அறிவியலுக்கு சவால் விடும் விஷயமாகவே இருந்து வருகின்றது.

முதலாம் அதிசயம்: புவி.

சூரிய குடும்பத்தின் முதலாம் அதிசயம் நமது பூமிதான். ஆம் சூரிய குடும்பத்திலும் சரி அண்ட வெளியிலும் சரி, மனிதனுக்கு இதுவரை தெரிந்ததில் மிகவும் சிறப்பு வாய்ந்ததும் அதிசயக்கத்தக்கதும் விடைகாணாத புதிர்கள் நிறைந்ததுமாய் விளங்குவது நமது பூமி ஒன்றுதான். மனிதர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழும் இடமான இந்த புவி, அண்டத்தில் உயிர்கள் இருப்பதாக அறியப்படும் ஒரே இடமாக கருதப்படுகின்றது. இன்றைய நிலையில், புவியில் மட்டுமே உயிர்களின் பரிணாம வளர்ச்சி ஏற்பட ஏதுவான சூழல் உள்ளது. நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியில் பிராணவாயு (ஆக்சிஜன்) கிடையாது. பிறகே தாவரங்கள் ஏற்படுத்திய பிராணவாயு வளிமண்டலத்தை நிரப்பியது. அது மேலும் ஓசோன் படலம் உருவாகவும் உதவியது. அதன் பின்னரெ பூவுலகில் உயிர்கள் தழைத்தன. இதை கேம்ப்ரியன் காலம் என்று கூறுவர். கேம்ப்ரியன் காலத்து விரிவாக்கத்தைத் தொடர்ந்து, 535 மில்லியன் வருடங்களில் புவியில் ஐந்து பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. கடைசியாக ஏற்பட்ட பேரழிவு 65 மில்லியன் வருடங்களுக்கு முன் ஒரு பெரிய விண்கல் புவியில் வந்து விழுந்ததால் ஏற்பட்டிருக்கக் கூடும் என நம்பப்படுகிறது. இந்த தாக்கத்தினால் டைனோசர் உட்பட ப‌ல ராட்சத பல்லிகளும் கூண்டோடு அழிந்து போனது. இந்த ஐந்து பேரழிவுகளிலும் தப்பிய உயிர்கள் பல்வேறு மாறுதல்கள் அடைந்து இன்றும் வாழ்ந்து வருகின்றன. அவற்றுள் சில பாலூட்டிகள் மனிதர்களாக பரிணாம வளர்ச்சி அடைந்து இன்று நிலவிலும் கால் பதித்து இருக்கிறது. இப்படிப்பட்ட அதிசய உயிர்கள் இங்கு வாழ்வதனால் பூமி சூரிய குடும்பத்தின் ஏழு அதிசயங்களில் முதலாம் இடத்தில் இருக்கிற்து.

எழுதியவர் : அரட்டகாயிபன் (22-Feb-13, 8:54 am)
சேர்த்தது : அரட்டகாயிபன்
பார்வை : 284

மேலே