காதல் கதை ! ! !

ஓடக்கரை ஓரத்திலே ஒத்தையிலே ஓர் -நாள்
வெற்றிலையின் நுனி இழை மத்தியிலே -என்
குலமகளின் முகத்திரையில்
ஒதுக்கிய சிறு பல் தெரிய -அவள்
கன்னங்களின் பக்கவாட்டில்
என் எண்ணங்களை
கில்லி எடுத்து
வெற்றிலைபோல் வரிசை படுத்தி -
அவள்
உதடுகளால் உலரவிட்டால்
சத்தியமாய் சொல்லுகிறேன்
பல காத ல் கதைகளை
பதித்திடலாம் ...

எழுதியவர் : சமரன் (21-Dec-10, 6:26 pm)
சேர்த்தது : சமரன் மு
பார்வை : 428

மேலே