துறவி

நாத்திகன் பட்ட அவஸ்தை..

முல்லா வசித்து வந்த ஊரில் ஒரு நாத்திகன் வசித்து வந்தார்.கொஞ்சமும் தெய்வ நம்பிக்கை இல்லாதவர்.தெய்வ நம்பிக்கை உள்ள முல்லா போன்றோரை எப்போதும் கிண்டலும் கேலியும் செய்பவர்.

ஒரு நாள் சந்தை திடலில் அந்த நாத்திகன் நின்று கொண்டிருந்தார்.

அந்த பக்கமாக முல்லா நடந்து வந்து கொண்டிருந்தார்..அவரை மக்கள் மத்தியில் அவமானபடுத்த வேண்டும் என்று எண்ணினார்.

முல்லா அருகே வந்ததும், "முல்லா அவர்களே! உலகத்தில் நீங்கள் தான் முற்றும் துறந்த துறவி என்று மக்கள் பேசிக்கொள்கிறார்களே? அப்படி நீர் எதை துறந்து ஞானி ஆனீர்" என்று நாத்திகன் கேலியாக கேட்டார்.

"எந்த முட்டாள் அப்படி சொன்னது..என்னை விட மிகவும் மகத்துவம் வாய்ந்த ஒரு துறவி இருக்கிறாரே!" என்றார் முல்லா.

நாத்திகனுக்கு மட்டும் அல்ல அங்கு நடமாடிக் கொண்டிருந்த மக்களுக்கும் இந்த தகவல் ஆச்சிர்யத்தை ஏற்படுத்தியது.

முல்லாவை விட மேலான துறவி இந்த ஊரில் யார் இருக்க முடியும் என்று அவர்களுக்கு விளங்கவில்லை.

நாத்திகனும் இந்த பதில் கேட்டு வியப்படைந்து "முல்லா இந்த ஊரில் உள்ள அந்த மகத்துவம் வாய்ந்த துறவி யார்?" என கேட்டார்.

"அந்த துறவி நீர் தான்" என்று முல்லா கூறியதை கேட்ட அதிர்ச்சியடைந்து விட்டார்.

"நானா அந்த துறவி. அது அப்படி?" என்று கேட்டார்.

"என்னை போன்ற சாதாரண துறவிகள் கேவலம் உலகத்தில் இருக்கும் பொருட்களைத்தான் துறப்பது வழக்கம் நீரோ கடவுளையே துறந்து விட்ட துறவி ஆயிற்றே. உம்மை மிஞ்ச கூடிய துறவி உலகத்தில் ஏது?" என்று முல்லா பதிலளித்தார்..

அங்கே சூழ்ந்திருந்த மக்கள் நாத்திகனைப் பார்த்து ஏளனமாக சிரித்தனர்..

நாத்திகன் தலை குனிந்தவாறு அந்த இடத்தை விட்டு அகன்று விட்டார்..

எழுதியவர் : படித்தது (21-Nov-13, 4:32 pm)
Tanglish : thuravi
பார்வை : 439

மேலே