016, வாழைப்பழப் பொங்கல்

முக்கனியில் ஒன்று வாழை. ஏழைகள் முதல் பணக்காரர் வரை அனைவராலும் வாங்கி உண்ணக்கூடியது வாழைதான். தமிழர்கள் திருநாளில் சமத்துவத்தை நினைவுப்படுத்தும் வாழைப்பழப் பொங்கலை சமைத்து அனைவரும் சந்தோஷமாக உண்டு மகிழுங்கள்!

தேவையானப் பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்
பொடித்த வெல்லம் - 1 கப்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 10
திராட்டை - 12
ஏலக்காய் தூள் - 1 டீ ஸ்பூன்
வாழைப்பழம்(பொடியாக நறுக்கியது) - 2
பால் - 1/2 கப்

செய்முறை:

* அரிசியைக் கழுவிக் கொள்ளவும்.

* பாலுடன் 2 கப் தண்­ணீர் சேர்த்துக் கொதிக்க விட்டு, கொதித்ததும் அரிசியைச் சேர்க்கவும்.

* சிறு தீயில் குழைய வேக விடவும்.

* வெந்ததும் வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, வெந்த அரிசியுடன் சேர்க்கவும்.

* அத்துடன் வாழைப்பழத்தைச் சேர்த்து, ஏலக்காய் தூள், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறி, மேலும் நெய் விட்டு இறக்கவும்.

* அட்டகாசமான வாழைப்பழப் பொங்கல் ரெடி.

எழுதியவர் : கணேஷ் கா (10-Jan-14, 5:13 pm)
சேர்த்தது : கா. கணேஷ்
பார்வை : 79

மேலே