சித்த மருத்துவ - குறிப்புகள்

சித்த மருத்துவ - குறிப்புகள்

*மேகரோகம் குணமாக*

ஆலம்பட்டையை பட்டு போல் பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைத்து கருப்பட்டி
சேர்த்து சாப்பிட்டு வர மேகரோகம் குணமாகும்.

*நீரழிவு நோய் குணமாக*

மாமரத்தின் தளிர் இலையை உலர்த்தி பொடியாக்கி வைத்து கொள்ளவும். 1 ஸ்பூன்
வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர
நீரழிவு நோய் குணமாகும்.

*இரத்த பேதியை குணப்படுத்த*

அத்திபட்டை, நாவல் பட்டை, கருவேலம் பட்டை, நறுவிளம் பட்டை சமஅளவு பொடி செய்து
50 கிராம் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி நாள்தோறும் 3 வேளை குடித்து வர
இரத்த பேதி, சீதபேதி பெரும்பாடு குணமாகும்.

*மூட்டுவலி குணமாக*

அத்திபாலை பற்று போட்டு வர மூட்டுவலி குணமாகும்.

*நரம்பு தளர்ச்சி நீங்க*

தினசரி 1 மாம்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.

*பற்கள் உறுதியாக இருக்க*

மாவிலையை பொடி செய்து பல் துலக்கினால் பற்கள் சுத்தமாகவும் உறுதியாகவும்
இருக்கும்.

*சேற்றுபுண் குணமாக*

காய்ச்சிய வேப்ப எண்ணை தடவி வர சேற்றுபுண் குணமாகும்.

*ஆண்மை குறைவு நீங்க*

அத்திப்பழம் முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட ஆண்மை பெருகும்.

*மூலம் இரத்தம் வெளியேறுவதை நிறுத்த*

வெங்காய சாறு 50 மில்லி, பசும்பால் 400, பசுநெய், அதி மதுரம் 20 கிராம்
சேர்த்து காய்ச்சி பதமாகும் வரை கொதிக்க காய்ச்சி பத்திரப்படுத்தவும். இதனை
நாள்தோறும் 1 கரண்டி 6 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

*வயிற்றுவலி குணமாக*

குறிஞ்சி கீரையை சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்று புண் குணமாகும். கீரையை
நிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்

எழுதியவர் : முரளிதரன் (25-Jan-14, 5:28 pm)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 254

மேலே