விதியின் விளையாட்டு1

ராஜா, ராதா தம்பதியர் சென்னையில் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு 2மகள்கள், வசதியான குடும்பம் இருவருமே ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.......


அலுவலகம் முடிந்ததும் வீட்டில் தனது செல்ல மகள்களுடன் நேரத்தைக்கழித்து சந்தோசமாக வாழ்ந்துகொண்டிருந்தனர்.


மூத்த மகள் ஷிவானி! இவள் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருக்கிறாள்.

போதுமான அளவு அறிவும், அழகும் பேச்சும் கொண்டிருந்தாள்!!!

ஷிவானி யாரிடமும் அதிகமாக பழகமாட்டாள்;தன்னிடம்
வந்து பேசுபவரிடம் மட்டும் பேசிவிட்டு அதோடு நிறுத்தி விடுவாள்.


இயல்பான பண்புடையவள் ஷிவானி.

இரண்டாவது மகள்தான் ரிஷானி!

ரிஷானியோ! ஷிவானிக்கு நேர்மாற்றம் கொண்டவள்,,,,,,

ரிஷானி தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதி முடித்து விட்டு இறுதி முடிவுக்காக காத்துக்கொண்டிருக்கிறாள் ...........

ரிஷானி அதிக அளவு அறிவும், அளவுக்கு மீறிய அழகும் கொண்டிருந்தாள்.

எல்லோரிடமும் சகஜமாக பேசி பழகிக்கொள்வாள்!!!

கேலி,கிண்டல்,அடக்கம்,அமைதி என எல்லா ரூபங்களிலும் தன்னை மாற்றிக்கொள்பவள்.............

ரிஷானி தேர்வு முடிவுக்காக காத்துக்கொண்டிருக்க!

பெற்றோர் இவளின் மேற்படிப்பிற்காக பெரிய பெரிய கல்லூரிகளில் இடம் தேடிக்கொண்டிருக்க!

அந்த ஊர் இளவட்டங்கள் ரிஷானிக்கு காதல் கடிதங்கள் கொடுத்து விட்டு இவளின் முடிவுக்காக ஏங்கிக்கொண்டிருந்தனர்...........


நம் கதையின் நாயகி தான் ரிஷானி!!!!!! அடுத்த பகுதியில் பார்க்கலாம்.




தொடரும்.............

எழுதியவர் : ப்ரியா (24-Feb-14, 1:42 pm)
பார்வை : 324

மேலே