=========யாவும் நீ =========

அன்னைக்கு அன்பூட்டும் அதிசயம் நீ
அதிசயங்கள் வியக்கும் புதுயுகன் நீ
அடுத்தவர் பொருள்கொள்ளா ஆதவன் நீ
அறிவுக்கு எட்டாத ஆழ்கடல் நீ !!!!

காதலுக்குத் தெரியாத ரகசியம் நீ
காதலிக்கத் தெரிந்த பொக்கிசம் நீ
கடைக்கண் பார்வையின் முகவரி நீ -என்
கண்கள்மட்டும் கண்ட காதல்சுரபி நீ !!!

கற்சிலை வடித்த காவியம் நீ
காவியம் போற்றும் நாயகன் நீ
கல்லுக்குள் சுரந்திடும் சுனை நீ
காந்தத்தை ஈர்க்கும் ஏகாந்தம் நீ

வல்லினம் வருடும் மெல்லினம் நீ
வஞ்சிக் கொடியின் இடையினம் நீ
வகுத்தல் இலயிக்கும் கணிதம் நீ
வாழ்க்கை நுகர்ந்திடும் வாசம் நீ !!!

யாருக்கும் எட்டிடாத சிகரம் நீ
யாரும் தீண்டிடாத இமயம் நீ
யாரும் கண்டிடாத புதையல் நீ
யான்மட்டும் பருகும் அமிழ்தம் நீ !!!

நான்தேடிய செவ்வந்தி பூ நீ -என்
நந்தவனத்தில் பூத்த நந்திவட்டம் நீ
நால்வர் போற்றும் நலங்கிள்ளி நீ
நவரசம் சொட்டும் நயாகரா நீ !!!

என்னுள் விழுந்த விருட்சம் நீ
எனக்காய் மலர்ந்த மல்லிகை நீ
எனக்கென பிறந்த எளியவன் நீ
எனக்கே எனக்கான இனியவன் நீ !!!

எழுதியவர் : priyaram (11-Mar-14, 4:37 pm)
பார்வை : 331

மேலே