அழிப்பது தமிழினை ஆம்

---சென்ற ஆட்சியில் எழுத்துச் சீர்த்திருத்தம் என்ற பேரில் தமிழ் அகர வரிசையைச் சீர்குலைக்க ஆட்சியாளர்கள் முயன்றபோது எழுதப்பட்டது---

பழுத்தசெந் தமிழதன் பயனுறு மெழுத்தினைக்
கொழுத்தகீழ் விலங்குகள் குறையெனத் திருத்துதல்
ஒழுங்கிலாச் செயலென ஓது!

கொழுத்தபின் வளைதனில் குடியிரா உயிரிபோல்
செழித்தசெந் தமிழினால் செழிப்பெலாம் அடைந்தபின்
அழிப்பது தமிழினை ஆம்!

கழுத்தினை அறுப்பதே கடமையோ? தமிழினால்
கொழுத்தபின் தமிழ்க்கொலை புரிவதோ? பிழைத்தவும்
இழுத்துநா அறுத்திடல் மேல்!

எழுதியவர் : அகரம் அமுதன் (19-Mar-14, 6:03 pm)
பார்வை : 120

மேலே