வேண்டாம் நண்பா மௌனம்

தினமும் திட்டி திட்டி
உன் அர்சனையை கேட்ட
என் காதுக்கு - இப்போ
நீ பேசாமல் இருப்பது
மரண வேதனையடா ...!!!

கேலிப்பெயர் வைத்து
நானும் நீயும் அழைப்பதை
பார்த்து மற்றவர்கள்
அப்படி அழைத்தால்
சண்டைக்கு போகும் -நீ ...!!!
கேலிக்காக ஒரு வார்த்தை
சொல்லாமல் இருப்பது
என் வாழ்க்கையே
கேள்விகுறியாக்குதடா ...!!!

எழுதியவர் : கே இனியவன் (18-Apr-14, 1:02 pm)
பார்வை : 145

மேலே