விதியின் விளையாட்டு23

ஜோசியர் என்னை வந்து பாருங்கள் என்று சொல்லிவிட்டு கோவமாக அங்கிருந்து கிளம்பினார்.....!

அவர் சென்றதும் என்ன இவர் இப்டி கோவமாக போகிறார் யார்...?என்று வினவினார் மனோஜின் அம்மா??

இவர்தான் நமது குடும்ப ஜோசியர் நமக்கு எல்லாம் நல்லதாய் சொல்லித்தருவார் இப்போது அவரிடம் எந்த அறிவுரையும் கேட்காமல் திடீரென இந்த திருமணத்தை பேசி முடித்த கோவமாக இருக்கலாம் என்று சமாளித்தார்...............


சரி அப்புறம் அவரை போய் பார்த்து சமாதானம் செய்யலாம் என்று பேசிக்கொண்டனர் இருவரும்.

திருமணபத்திரிக்கை விஷயங்களை முடித்துவிட்டு அவரவர் வீட்டுக்கு கிளம்பினர்..!

வீட்டிற்கு வந்ததும் ரிஷானியின் அம்மா....

நாளைக்கு ஷிவானியின் திருமணத்திற்கு தேவையான நகை மற்றும் ஏனைய பொருட்கள் எல்லாம் வாங்க செல்ல வேண்டும் காலை 10மணிக்கெல்லாம் புறப்பட்டு தயாராக இருங்கள் என்று சொன்னார் அம்மா....!

சரிம்மா!என்று இருவரும் சொல்லிவிட்டு சாப்பிட அமர்ந்தனர்.......

சாப்பிட்டதும் பெற்றோர்.........

அவசரமாக ஒரு இடத்திற்கு செல்ல வேண்டி இருக்கிறது நீங்கள் இருவரும் வீட்டில் கவனமாக இருங்கள் நாங்கள் போயிட்டு சீக்கிரம் வந்திடுறோம் என்று சொல்லி வேகமாக ஜோசியரை பார்க்க கிளம்பினர்.........!


ஜோசியரின் வீட்டிற்குள் செல்லும் போது அவர் பூஜையில் இருக்கவே,,,,,,,,,

என்னங்க ஏதாவது சொல்லுவாரா???

அவர் கோவமாக பேசும் போதே மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது என்று தன கணவனின் காதில் முணுமுணுத்தாள் ரிஷானியின் அம்மா....!

பயப்படாத ஏதாவது சொல்லி சமாளிப்போம் என்று ஆறுதல் படுத்தினார் அவர்,,,,,

அப்பொழுது உள்ளிருந்து அவர் வந்தார்.

நான் உங்களிடம் என்ன சொன்னேன் என்று கத்தினார்......

ஐயா! அது வந்து........பையன் நல்லவன் புடிச்சிடிச்சி எல்லாமே ரெடி பண்ணிட்டோம் நீங்கலு அவசியம் வந்து கலந்து கொண்டு சிறப்பாக நடத்த வேண்டும் என்று தன கையில் இருந்த பத்திரிக்கையை கொடுத்தார்......!

நான் இவ்ளோ சொல்லியும் கேட்கல இல்ல அவ ஜாதகப்படி 2வருடங்கள் கழித்துதான் திருமணம் செய்ய முடியும் இனி உங்கள் விருப்பம்.........

நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு உள்ளே சென்றார்........

இருவரும் சற்று நேரம் அமைதியாய் வெளியில் வந்து அமர்ந்தனர்....!

என்னங்க என்ன முடிவு பண்ணிருக்கீங்க? என்று கணவனிடம் கேட்க....?

அவர் எதுவும் பேசாமல் மனோகரனுக்கு அழைப்பை விடுத்து உடனே காந்திநகர் உடுப்பி ஹோட்டலுக்கு உடனே வா கொஞ்சம் அவசரமா பேசணும் உன் மனைவியையும் உடன் அழைத்து வா என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தார்...........!




விதி தொடரும்.......

எழுதியவர் : ப்ரியா (21-Apr-14, 10:55 am)
பார்வை : 314

மேலே