தேவரைப் போலத் தொழுதெழுக - ஆசாரக் கோவை 16

அரசன் உவாத்தியான் தாய்தந்தை தம்முன்
நிகரில் குரவர் இவரிவரைத்
தேவரைப் போலத் தொழுதெழுக வென்பதே
யாவருங் கண்ட நெறி. 16 ஆசாரக் கோவை

பொருளுரை:

அரசன் (தலைமை ஆட்சியாளர்), ஆசிரியன், தாய், தந்தை, தனக்கு முன்னே பிறந்த மூத்தோன் என இவர்கள் தமக்கு நிகரில்லாத பெரியோர்களாவர்.

இவர்களைத் தெய்வம் போலத் தொழ வேண்டும் என்பது யாவராலும் வரையறுத்துக் கூறப்பட்ட நெறிமுறையாகும்.

இச்செய்யுளில் இரண்டாமடி ஒரு சீர் குறைந்து வந்தமையால் இப்பாடல் சவலை வெண்பா ஆகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Apr-14, 7:34 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 63

மேலே