பட்டிகாடும் நம்ம பட்டணமும்

மொட்ட மாடி இல்லை
மோட்டுவளை வீடு
அக்கம் பக்கமெல்லாம்
அன்பு வாழும் பாரு !!
அது அங்கே !அது அங்கே ...!!

சீட்டு கட்டு போல அட
வீட்டை கட்டி இருந்தும்
அடுத்த வீட்டில் யாரு
அறிந்திடாது பாரு
இது இங்கே !இது இங்கே ...!!

மனசதானே பார்க்கும்
பணத்தை பார்ப்பதில்லை
யாரைகண்டும் சிரிக்கும்
குணமும் நிறையவிருக்கும்
அது அங்கே !அது அங்கே ...!!

பணத்தை மட்டும் பார்த்து
பழக்கம் கொண்ட உலகம்
மனசைக் கல்லாய் கிடத்தும்
மனுசபயலக் காணோம் !!
இது இங்கே !இது இங்கே ...!!

வெளிவாசலிலே வந்தவங்க
யாருனாலும் சிரிப்புடனே வரவேற்கும்
தண்ணி முதலில் தந்து
அன்பினாலே அணைக்கும்
அது அங்கே !அது அங்கே ...!!

கதவை நல்லா சாத்தி
பூட்டு போட்டு வைக்கும்
யாருவந்து நின்னா
ஓட்டையால எட்டிப் பார்க்கும்
எல்லாவிசயமும் சொன்னத் தானே திறக்கும்
இது இங்கே !இது இங்கே ... !!

திருட்டு பயலும் வந்தா
உருட்டு கட்டையால் பதம் பார்க்கும்
கத்தி கூச்சல் தந்தா
ஊரு மொத்தமும் திரளும்
அது அங்கே !அது அங்கே ...!!

பொடிபயலக் கண்டு ஓடி ஒளியும் பாரு
கத்தி கண்டா போதும்
கதவடைக்கும் ஊரே
கழுத்தறுத்து சென்றாலும் கலங்கிடாத மனசு
இது இங்கே !இது இங்கே ... !!

பரந்த பூமி பச்சை பொய்
இச்சையால் மட்டும்
இளிக்கும் உதடு
பென்பித்தால் தாயையும் கொல்லும்
இது இங்கே !இது இங்கே ... !!

கஷ்டம் தலிவிரி கோலம் கொண்டும்
வட்டிக்கு வாங்க தயங்கும்
அது மானமுள்ள மனுசனுங்க
கடன் வந்து கழுத்தை நெரிச்சா
குடும்பத்தோட தற்கொலையாகும்
அது அங்கே !அது அங்கே...!!

இஷ்டம் போல கடனை வாங்கி
வெட்டி செலவாய் பொழுதை கழிக்கும்
களிப்பு தீர கண்ணியோட
தண்ணியில மிதக்கும்
கடன கேட்டா ஊரை காலிபண்ணி தலைமறைவாகப் பார்க்கும்
இது இங்கே !இது இங்கே ...!!

எழுதியவர் : கனகரத்தினம் (25-Apr-14, 11:05 am)
பார்வை : 106

மேலே