என்ன செய்ய

மூச்சில் கலந்த பின்
பேச்சு எதற்கு என்று
திரும்பினாயோ?

நினைவெல்லாம் நான் இருக்க
நேரே பார்க்காமால்
போனாயோ?

உன்னுள்ளே நான் கலந்ததால்
கலங்க மாட்டேன் என
நினைத்தாயோ?

என் உள்ளம் உனை நாடும்
விந்தை விளையாட்டும்
புரியாதோ?

வலி தாங்கும் உள்ளம்- இனி
விதி மாறும் முறைகளைச்
செய்வாயோ?

தடம் மாறும் என் எண்ணம்
தடை தாண்ட என்னை நீ
தாங்குவாயோ?

எழுதியவர் : காதல் (29-Apr-14, 11:17 pm)
சேர்த்தது : shruthi
Tanglish : yenna seiya
பார்வை : 79

மேலே